தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 mei 2013

மாத்தளை மனித புதைகுழி விவகாரம் - குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று விசாரணை


பல்கலைக்கழக மாணவிக்கு அந்தரங்கத்தை காட்டி தொந்தரவு: பயணிகளிடம் வாங்கிக்கட்டிய ஆசாமி!
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 05:36.16 AM GMT ]
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்றில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தமது அந்தரங்கத்தைக் காட்டி தொந்தரவு செய்த நபரொருவரை மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவி ஏனைய பயணிகளுக்கு இது குறித்து தெரிவித்ததை அடுத்து பயணிகளும் பஸ் சாரதியும் சம்பந்தப்பட்ட நபரை நையப்புடைத்து மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் மஹபாகே பொலிஸார் வத்தளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை மனித புதைகுழி விவகாரம் - குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 05:39.51 AM GMT ]
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித புதைக்குழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பான விசாரணைகளை இன்று இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்தவுள்ளனர். 
கடந்த 10 ஆம் திகதி மாத்தளை நீதவான் சத்துரிகா டி சில்வா வழங்கிய உத்தரவிற்கு அமைய இந்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

மாத்தளை மனித புதைக்குழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் கூடுகள் 1988-90 ஆம் ஆண்டுகளில் காணாமல் போன அல்லது கொலை செய்யப்பட்ட தமது உறவினர்களாக இருக்கலாம் எனக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட சத்தியக் கடிதங்களுக்கு அமைய சட்டத்தரணிகள் குழுவொன்று விடுத்த கோரிக்கை அடுத்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

88-89 ஆம் ஆண்டுகளில் காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் 13 சத்தியக்கடிதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இவர்கள் சார்பில் சட்டத்தரணி சுனில் வட்டகல உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். இன்று விசாரணைகளை ஆரம்பிக்க உள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினர், உறவினர்களின் சாட்சியங்களை பதிவுசெய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten