தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 mei 2013

தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது!- பொதுபல சேனா


ஓரினச் சேர்க்கையாளர் குறித்த பிரிட்டனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு
[ சனிக்கிழமை, 11 மே 2013, 02:23.48 AM GMT ]
ஓரினச் சேர்க்கையாளர்களின் செயற்பாடுகளை சட்டபூர்வமானதாக்குமாறு பிரிட்டனின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
.ஓரினச் சேர்க்கை இலங்கை குற்றவியல் சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தத் தண்டனையை நீக்க வேண்டுமெனவும் பிரிட்டன் கோரியுள்ளது.
எனினும், இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்களை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளாமையினால் அவர்களது மனித உரிமை மீறப்படுவதாக பிரிட்டன் குற்றம் சுமத்தியுள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கலாசாரத்திற்கும் பிரித்தானிய கலாசாரத்திற்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாகவும் இதனால் யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது!- பொதுபல சேனா
[ சனிக்கிழமை, 11 மே 2013, 02:20.55 AM GMT ]
தமிழ் புலம்பெயர் மக்களுடன் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நோர்வே பிரஜை ஒருவரின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றது.
தமிழ் புலம்பெயர் சமூகத்தை சந்திக்க வேண்டிய தேவை காணப்பட்டது. அண்மைய அமெரிக்க விஜயத்தின் ஊடாக இந்தத் தேவை நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.
நாட்டுக்கு வெளியே இந்த நாட்டை நேசிக்கும் பல தேசப்பற்றாளர்கள் இருக்கின்றார்கள். துரதிஸ்டவசமாக அவர்கள் இந்த சமூகத்தில் இல்லை.
போரின் மூலம் வெற்றியோ தோல்வியோ கிடைக்காத காரணத்தினால், தமிழ் சகோதரர்களுடன் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதைய அரசாங்கம் வரையில் சகல அரசாங்கங்களும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. அதனை ஓர் ஜனநாயக உரிமையாகவே பார்க்க வேண்டும்.
தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனநாயக உரிமை தமது அமைப்பிற்கு காணப்படுகின்றது.
நோர்வே அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten