தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 21 mei 2013

இலங்கையின் மனித உரிமைமீறல்கள் தொடர்பி;ல் அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்கவேண்டும்- தொழில்கட்சியினர்!


இலங்கையில் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலிய தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

12 பேரைக்கொண்ட இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பொப் காரிடம் தமது கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதிக்கவேண்டியது அவசியமானதாகும். இதனை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வலியுறுத்தவேண்டும் என்று தொழில்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரின் அறிக்கையின்படி இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகளே அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் கோருவோரே படகுகள் மூலம் அனுப்பும் விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ளமையையும் தொழில்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten