தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 mei 2013

உரிமையாளர்கள் இல்லாத காணிகளே சுவீகரிக்கப்படுகிறது!- பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி


தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கலைக்கும் எண்ணம் எப்போதும் இல்லை!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 06:58.21 AM GMT ]
வட,கிழக்கு தமிழ்தேசத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பிற்கு முற்றுப்புள் ளியிடுவதற்கு கொள்கை ரீதியான உடன்பாட்டுடன்; தமிழ் தேசிய மக்கள்; முன்னணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தாயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கலைக்கும் எண்ணம் எப்போதும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
கொள்கைரீதியான உடன்பாடு ஏற்பட்டால் கட்சியை கலைத்து விட்டு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
விடயம் குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை குறித்த போலியான கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் கொள்கை ரீதியான உடன்பாடு இல்லாமல் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியும்?
யுத்தத்திற்குப் பின்னால் இனத்தின் உணர்வுகளை, உரிமைகளை மதிக்காத அல்லது புறந்தள்ளும் வகையில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமைந்திருந்தமையே, நாம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியமைக்கு காரணம்.
ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்தை பிடித்துக் கொண்டு நாங்களும் கூட்டமைப்பிற்குள் இருந்திருந்தால் இன்று எதுவுமேயில்லாத மாகாணசபை முறைமையினை ஏற்று தமிழர்களை சிறீலங்காவின் ஒற்றையாட்சி முறைமைக்குள் தள்ளும் மிகமோசமான வரலாற்றுத் தவறுக்கு நாங்களும் உடந்தையாக மாறியிருப்போம்.
நாம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தோம். மக்கள் எங்களை நிராகரித்தார்கள். அதற்காக நாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை. இந்த மக்களோடு இருக்கிறோம். இந்த மக்களுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
2010ம் ஆண்டு இருந்த நிலை இன்று இல்லை. மக்கள் எங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஊடகங்கள் எங்களை ஏற்றுக் கொள்கின்றது. தமிழ் இனத்தின் அரசியல் வரலாற்றில் நாமும் தவிர்க்க முடியாத பாகமாக மாறியிருக்கின்றோம்.
எனவே மக்களுடைய விருப்பம் ஒற்றுமை என்றால் மக்களுக்காக கொள்கை ரீதியான உடன்பாட்டுடன் நாங்கள் இணைந்து செயற்பட எப்போதும் தயாராகவே இருக்கி ன்றோம். ஆனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியை கலைத்துவிட்டு நாம் யாருடனும் ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துடன் இணைய தயாரில்லை.
இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் எங்களுடைய தீர்மானங்களுக்காக மக்கள் பெருமிதப்படுவார்கள். அதற்காக அரசியலை மக்கள் மயப்படுத்தும் எங்கள் அரசியல் வேலைத்திட்டத்தை உலகத்தின் ஜனநாயக நாகரீகங்களுக்குட்பட்டு தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
பல அச்சுறுத்தல்களும், எங்களை பின்னடைவு காணச்செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என்றார். 

உரிமையாளர்கள் இல்லாத காணிகளே சுவீகரிக்கப்படுகிறது!- பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி
[ சனிக்கிழமை, 04 மே 2013, 07:04.00 AM GMT ]
யாழ். மாவட்டத்தில் பொலிஸார் நிலைகொண்டுள்ள காணி உரிமையாளர்கள் இனங்காணப்படாததை அடுத்தே அக் காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரீ தெரிவித்தார்.
பொலிஸார் நிலைகொண்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இருப்பின் அவர்கள் அந்தந்தப் பகுதி பிரதேச செயலர் அல்லது அரச அதிபருடன் தொடர்பு கொண்டு சுவீகரிப்புக்கு எதிரான முறைப்பாடு செய்தால் அவ் முறைப்பாடுக்ள தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்துவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் பொரும்பாலும் பொது மக்களுடைய வீடுகளிலேயே உள்ளது.
அவ்வாறு அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களின் தேவைகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றது.
குறிப்பாக நெல்லியடி மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களின் தேவைகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுவதாக அறிவித்தல்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.
ஏனைய பொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ள காணிகளும் பொலிஸ் தேவைகளுக்காக சுவீகரிக்க வேண்டும் என்று பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனரா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த எஸ்.எஸ்.பி:-
யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் அரச காணிகளில் இல்லாத காரணத்தினால் பெரும்பாலும் பொது மக்களுடைய காணிகளில் தான் இருக்கின்றது. அக் காணிகளின் உரிமையாளர்களை அடையாளம் காணமுடியாதுள்ளது.
இதனால் தான் அக் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு கோரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சட்ட விதிமுறைகளின் படியே செயற்படுத்தப்படுகின்றது.
குறித்த காணிகளின் உரிமையாளர்கள் இங்கு இருப்பின் அவர்கள் அவ் விடயம் தொடர்பாக அந்தந்தப் பகுதி பிரதேச செயலர் ஊடாக அரச அதிபருக்கு முறைப்பாடுகளைக் கொடுக்கலாம்.
அவ் முறைப்பாடுக்ள தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten