தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

13 ஆவது திருத்தத்தை இரத்து செய்யும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய


வடமாகாண சபைத் தேர்தல் - குழப்பத்தில் ஜனாதிபதி: சிறிதுங்க ஜயசூரிய தகவல்
[ புதன்கிழமை, 15 மே 2013, 09:52.40 AM GMT ]
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதா அல்லது அதனை நடத்தாமல் விடுவதா என்ற திண்டாட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளார் என தேசிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் உள்ளது. இதற்கான உறுதிமொழியை எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள அரச தலைவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் சகபாடிகளான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க போன்றோர் வடக்கு தேர்தலை நடத்த வேண்டாமென ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதா இல்லையா என்ற குழப்ப நிலையில் உள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தத்தை இரத்து செய்யும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய
[ புதன்கிழமை, 15 மே 2013, 10:26.35 AM GMT ]
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு ஜாதிக ஹெல உறுமய ஒரு சட்டமூலத்தை அடுத்த இரண்டு வாரங்களில் கொண்டுவரவுள்ளது. 
தீர்மானம் தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நேற்று மாலை எடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு அமைய வாக்களிக்க அனுமதிக்குமாறு கட்சித் தலைவர்களை கேட்டுகொள்ள வேண்டும் எனும் ஒரு தீர்மானத்தை மத்திய குழு எடுத்துள்ளது.
சட்டமூலத்தை சமர்பித்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றில் உள்ள சகல கட்சிகளையும் சந்தித்து இந்த சட்டமூலத்தின் நோக்கத்தை விளக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Geen opmerkingen:

Een reactie posten