சட்டவிரோதமாக ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்த வடமராட்சி – கரணவாய் பகுதியை சேர்ந்த பெண்னொருவர் கைது செய்ப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். குறித்த பெண் குருநகரில் உள்ள பெண்கள், சிறுவர் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி முன் இன்று செவ்வாய்க்கிழமை முற்படுத்த போது அவரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அவரிடம் வளர்ந்த 9 மாதக் குழந்தையைக் கைதடி சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பாக பராமரிக்குமாறும் நீதிவான் தனது உத்தரவில் தெரிவித்தார். நெல்லியடி – கரணவாயை சேர்ந்த பெண் திருமணமாகி 9 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் கோயில் ஒன்றில் வைத்து வறிய நிலையில் இருந்த பெண்ணொருவரிடம் இருந்து அவரின் இணக்கத்தோடு குறித்த குழந்தையைப் பெற்று வளர்த்து வந்துள்ளார். கரணவாய் பகுதி குடும்பநல மாதுவிற்கு கடந்த மாதம் இச் சம்பவம் தெரியவந்தது. கரவெட்டி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு அவர் இந்த விடயத்தைக் கொண்டுசென்றார்.
சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக கரவெட்டி பிரதேச செயலக நன்னடத்தை உத்தியோகத்தர் சிற்றம்பலம் புவனேந்திரனின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் நன்னடத்தை உத்தியோகத்தர் கடந்த மாதம் 10ம் திகதி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இம் முறைப்பாட்டிற்கு அமைய நெல்லியடி பொலிஸார் கடந்த மாதட 26ஆம் திகதி யாழ். குருநகர் பெண்கள் சிறுவர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். இதன்படி இன்று குழந்தையை சட்டவிரோதமாக தத்தெடுத்த பெண் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படார்.
http://www.jvpnews.com/srilanka/80995.html
Geen opmerkingen:
Een reactie posten