தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சேறுபூசும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை: தப்பியோடும் சஷீந்திர ராஜபக்ஷ
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 01:23.23 PM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தன்னை விவாதங்களுக்கு அழைத்த போதிலும், அந்த விவாதங்களுக்கு சென்று சேறுபூசும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் தேவையில்லை என முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
மொனராகலையில் டிப்பெண்டர் வாகனங்கள் சுற்றி திரிவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
டிப்பெண்டர் என்பது வாகனம், அதனை வேலைகளுக்காக பயன்படுத்துகிறோம். தேர்தலில் முறையற்ற வகையில் அவை பயன்படுத்தப்படுவதில்லை.
ஜே.வி.பின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாங்கள் பாதாள உலகத்தினரை வரவழைத்து தேர்தல் பிரசாரங்களை செய்வதாக குற்றம் சுமத்துகிறார். என்னை விட அவருக்கே பாதாள உலகத்தினர் பற்றி தெரியும் எனவும் சஷீந்திர ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் டளஸ் அழகபெரும,
இன்றைய அரசாங்கம் மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மறுகின்றேன்.
சந்திரிக்காவின் அரசாங்கத்தின் காலத்திலேயே இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் ஒரு மதுபான அனுமதிப்பத்திரமேனும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தினால், அமைச்சர் பதவியில் இருந்து விலகி விடுவேன்.
அத்துடன் மொனராகலையில் தேர்தல் வன்முறைகள் நடப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளதையும் நிராகரிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgu7.html


அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 01:30.02 PM GMT ]
குடியேற்றவாசிகளை தடுப்பு முகாம்களில் அடைக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் திட்டங்களை முடிவிற்க்கு கொண்டுவரக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்பை அந்தநாட்டின் உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் உயர்நீதிமன்றம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் அவுஸ்திரேலிய நடைமுறையை செல்லுபடியற்றதாக்கி உள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாங்கம் நிரந்தர விசாக்களை வழங்க மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgvy.html

Geen opmerkingen:

Een reactie posten