தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 mei 2013

இலங்கை பொதுநலவாய மாநாடு தொடர்பில் அவுஸ்திரேலியாவுக்கு தொடர் அழுத்தம்!!


மேலும் 14 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர காவல்படையினரால் கைது!
[ சனிக்கிழமை, 04 மே 2013, 01:01.04 AM GMT ]
கடந்த முதலாம் திகதி 11 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து மேலும்; 14 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை இந்திய ஆந்திர மாநில ராஜ்முந்திரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று கண்ணாடி இழைப் படகுகளில் வந்து இந்திய கடலில் மீன்பிடித்த 14 பேரே நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 1500 கிலோ மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை பொதுநலவாய மாநாடு தொடர்பில் அவுஸ்திரேலியாவுக்கு தொடர் அழுத்தம்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 01:29.33 AM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் அவுஸ்ரேலியா பங்கேற்க கூடாது என்று அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் ஜெப்ரி ரொபட்சன் என்ற அவுஸ்திரேலியாவின் பிரபல சட்டத்தரணி, அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சி ஒன்றின்போது இலங்கை மாநாட்டை அவுஸ்திரேலிய அரசாங்கம் புறக்கணிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இலங்கையில் பிரதமநீதியரசரை சட்டரீதியற்ற முறையில் நீக்கியமையானது இலங்கையின் சட்டத்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten