தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 mei 2013

கனடா, அமெரிக்காவுக்குள் ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் டொமினிக்கன் குடியரசில் கைது

டொமினிக் குடியரசை தளமாக கொண்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு நாடுகளுக்கு ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்திய வலையமைப்பு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
டொமினிக் குடியரசின் தேசிய காவற்துறையினர் இந்த குழுவை கைது செய்துள்ளனர்.
கனடாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவரின் தலைமையில் இந்த குழு செயற்பட்டு வந்ததாகவும், கடந்த இரண்டு மாதங்களாக இந்தக் குழு டொமினிக் குடியரசில் பதுங்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து அவர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Geen opmerkingen:

Een reactie posten