தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 mei 2013

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அணி திரட்டும் டக்ளஸ் தேவானந்தா


வடக்கில் பாதுகாப்பு வலய விஸ்தரிப்பு குறித்து இந்தியா கேள்வி எழுப்பியதா?: கோத்தபாய கேள்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:27.47 AM GMT ]
யாழ்ப்பாணம், பலாலி மற்றும் காங்கேசன்துறை பாதுகாப்பு வலயப்பகுதி விஸ்தரிக்கப்படக்கூடாது என்று இந்தியா இலங்கையிடம் கோரியதாக என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கேட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு 13வது அரசியல் அமைப்பில் இருந்து அதிகாரங்கள் எவற்றையும் நீக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன்போது குர்ஷித் பலாலி-காங்கேசன்துறை பாதுகாப்பு வலய விஸ்தரிப்புக் குறித்தும் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பிலேயே கோத்தபாய, ஜீ.எல்.பீரிஸுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது கருத்துரைத்துள்ள கோத்தபாய, யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் கோரிக்கைகள்ஏற்றுக்கொள்ளப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் 13வது திருத்தத்தை இலங்கை மக்கள் கோரவில்லை என்றும் கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அணி திரட்டும் டக்ளஸ் தேவானந்தா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:24.49 AM GMT ]
13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களை பிடுங்கிக் கொள்ள இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மாகாணசபைகளின் இந்த அதிகாரங்களைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், இந்த எதிர்ப்பு அணி இலங்கை அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இந்தக் குழுவில் உள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்தக் குழுவில் அரசதரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் டியு.குணசேகர, திஸ்ஸ விதாரண, ஜனக பண்டார தென்னக்கோன், றெஜினோல்ட் குரே, மேர்வின் சில்வா, பீலிக்ஸ் பெரேரா, ராஜித சேனாரத்ன ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten