தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 mei 2013

மக்கள் முன்னணி என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்!


முள்ளிவாய்க்கால் பேரணில் கலந்துகொள்ளும் வெளியிட மக்களுக்கான வாகன ஒழுங்குகள் ஏற்பாடு!
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:05.56 PM GMT ]
லண்டனில் நாளை மறுதினம் சனிக்கிழமை ( 18-05-13 ) பிரமாண்டமான அளவில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் வெளியிட மக்களுக்கான வாகன ஒழுங்குகள் பிரித்தானிய தமிழர் பேரவையினால் செய்யப்பட்டுள்ளது.
லிவர்பூல், மன்செஸ்டர், பெர்மிங்ஹாம், பிரிஸ்டல், வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் இருந்து சனிக்கிழமை காலை புறப்படும் வகையில் இந்த வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பேரணியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு தமது பெயர் விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அன்றைய தினம் நண்பகல் 1மணிக்கு North Carriage Park, Hyde Park (Closest station: Marble Arch) இல் ஆரம்பித்து, Waterloo Place (Closest station: Piccadilly Circus) இல் நிறைவுறும். இதனைத் தொடர்ந்து பல அரசியல் மற்றும் கலை உலகப் பிரமுகர்கள் உரையாற்றவுள்ளனர்.
Liverpool 07570165259

Birmingham 07927023912

Manchester 07876705023

Bristol 07988877604

Wales 07824386422

Scotland 07553630371

மக்கள் முன்னணி என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்!
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:07.54 AM GMT ]
பயங்கரவாதம் அழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் நகர்ப்பகுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளில் உரிமை கோருபவர்களாக மக்கள் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் 2009ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தம் முடிந்ததையடுத்து அதன் வெற்றிவிழாவினை அரசாங்கம் வெகுகோலாகலமாக கொண்டாடி வருகின்றது.
அதேவேளை  நாளை வட பகுதியில் இறுதி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்காக உயிரிழந்த மக்களின் நினைவாக அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ள நிலையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Geen opmerkingen:

Een reactie posten