தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 mei 2013

விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மீட்பு!


யாழில் விடுதிப் பணத்தை செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்ற கேணல் தர இராணுவ அதிகாரி கைது
[ சனிக்கிழமை, 04 மே 2013, 04:43.26 AM GMT ]
இராணுவத்தின் உயர் அதிகாரியெனக் கூறி யாழிலுள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்து பணம் கொடுக்காமல் தப்பிக்க முயன்ற சிங்கள நபரொருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். நகரிலுள்ள விடுதியான்றில் நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
யாழிலுள்ள விடுதியொன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குpறத்த நபரொருவர் வந்து தங்கியுள்ளார். அதாவது விடுதியில் நான்கு நாட்களாக தங்கியிருந்த நிலையில் விடுதிக்கு நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை செலுத்த வேண்டியேற்பட்டது.
இந்நிலையில் குறித்த நாற்பதாயிரத்தையும் செலுத்தாமல் தப்பித்துச் செல்வதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த விடுதி காப்பாளர்கள் அவரை அணுகிய போது தான் யாரென்று தெரியுமோ என்றும் கேள்வி கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தான் இராணுவத்தின் கேணல் தர உயர் அதிகாரியென்றும் தன்னிடம் பணமில்லை என்றும் கூறி தப்பித்துச் செல்ல முற்பட்ட வேளை விடுதி காப்பாளர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட விசேட தகவல்களின் அடிப்படையில் அங்கு பொலிஸார் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் யாழ். பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இராணுவ அதிகாரி என்று கூறிய சிங்களவரொருவரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மீட்பு
[ சனிக்கிழமை, 04 மே 2013, 09:32.35 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் 15 வருடங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் �லயன் எயார் - அன்டனோவ் 24� ரக விமானத்தின் நொறுங்கிய பகுதிகளில் சில இன்று மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
நேற்று இரணைமடுக் கடற்பகுதியில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இந்நிலையில், வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் குறித்த கடற்பிரதேசத்துக்குச் சென்ற பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொலிஸ் அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன உள்ளிட்ட பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டவர்கள் மேற்படி விமானத்தின் பாகங்களை மீட்டனர்.
விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள் சில இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படைக்குச் சொந்தமாக கப்பலொன்றின் உதவியுடன் இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பிரதேசத்தில் இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்குறிப்பிட்ட சில பாகங்களை மாத்திரமே தற்போதைக்கு மீட்க முடிந்ததாகவும் கடற்படையினர் அறிவித்தனர்.
இந்த விமானத்தின் பாகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை கரைக்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணிகள், அரசாங்க அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோரே விமானத்தில் பாகங்கள் விழுந்து கிடப்பதாகத் தெரிவிக்கப்படும் பகுதிக்கு சென்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.வை.மஹப்தீன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த 1998 செப்டம்பர் மாதம் 29ம் திகதி 48 பயணிகளுடனும் 8 விமான சிப்பந்திகளுடனும் பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கிப் பயணித்த லயன் எயார் விமானம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி

Geen opmerkingen:

Een reactie posten