தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 mei 2013

மன்னார் எமில்நகரில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சி!


பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசாங்கம் திணறுகின்றது!- ஜே.வி.பி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 03:39.39 AM GMT ]
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஜே.பி.வி கொழும்பில் நடத்திய மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிரான பாத யாத்திரையின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது சமாளிக்க முடியாத பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் தற்போது பொதுவான கட்டணங்கள் அனைத்தையும் அதிகரித்து வருகிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் விடுகின்ற தவறுகளால், பொது மக்களே பாதிப்படைவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மன்னார் எமில்நகரில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சி!
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:16.24 AM GMT ]
மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார், எமிழ் நகர் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் உள்ள அரச காணியினை அத்துமீறி குடியேறி தற்போது குறித்த காணிகளில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமிழ் நகர் கிராம சேவையாளரினால் கடந்த மாதம் 17 ஆம் திகதி மன்னார் பிரதேசச் செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களிடம் அமைத்துள்ள தற்காலிக குடிசைகள் மற்றும் சுற்று வேலிகளை பிரித்து காணியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கடிதம் உரிய தரப்பினருக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை மீறி தொடர்ந்தும் காணிகளில் இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 600 சிங்கள குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சாந்திபுரம், சௌத்பார், எமிழ் நகர் போன்ற கிராமங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்காக முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன.
இதன் அடிப்படையிலேயே எமிழ் நகர் பகுதியில் அரச காணிகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தம்மை வெளியேற்றி அந்த காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten