தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 mei 2013

புல்மோட்டையில் மக்களின் குடியிருப்பு நிலங்கள் கடற்படையினரால் பலவந்தமாக அபகரிப்பு! நடுத்தெருவில் மக்கள்


ஆயுதங்களை வைத்திருந்த நான்கு பேர் கைது
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 05:10.31 AM GMT ]
ஆயுதங்களை வைத்திருந்த நான்கு பேரை மஹாஓய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து நான்கு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மஹாஓய பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் வராபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தெஹியத்தகண்டிய நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்,

புல்மோட்டையில் மக்களின் குடியிருப்பு நிலங்கள் கடற்படையினரால் பலவந்தமாக அபகரிப்பு! நடுத்தெருவில் மக்கள்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 12:21.04 PM GMT ]
பலவந்தமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் தமது சொந்த வீட்டைவிட்டு விரட்டி தம்மை நடுத்தெருவில் விட்டுள்ளதாக புல்மோட்டை ஜின்னாபுரம் மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாம் இப்பிரதேசத்தில் 1988ம் ஆண்டு முதல் வசித்து வருகின்றோம்.
நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து இடம்பெயர்ந்து சென்று மீண்டும் 2006, 2007 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மீள் குடியேறினோம்.
இதன் பின்னரே எமது குடியிருப்புகளுக்கு அண்மையில் கடற்படையினரின் முகாம் 2010 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் எமது குடியிருப்புக் காணிகள் தமக்குத் தேவையென கூறி எம்மை மிரட்டி பல அட்டூழியங்களை மேற்கொண்டு பலவந்தமாக அதிகாரத்தை பயன்படுத்தி விரட்டியுள்ளனர்.
இக்கிராமத்தில் 22 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
குறிப்பாக இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் நுழையும் கடற்படையினர் வேலிகளை அறுத்து எமது உடைமைகளுக்கு சேதங்களை ஏற்படுத்தி விட்டு செல்வதனால் நாம் இரவு நேரங்களில் வேறு இடங்களில் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதனை சாதகமாக பயன்படுத்திய அவர்கள் நாங்கள் அங்கு இல்லாத வேளை, எமது குடியிருப்புகளை ஆக்கிரமித்து அதனை அவர்களின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் எமது வீடுகளுக்குள் நாங்கள் தற்போது செல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸிலும் இதற்கு பொறுப்பான அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் முறையிட்டும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.
இதேவேளை, எவ்வித உதவியும் இன்றி எங்களது சொந்த வீடுவாசல்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களாக நடுத்தெருவில் நிற்கின்றோம் என்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten