தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

மட்டக்களப்பில் ஆட்சேர்ப்புத் திட்டம் தயாரிக்கப்படாமைக்கு ஆட்சேபித்து ஆர்ப்பாட்டம்


ஈழத்தில் பிரபலமான சிற்பக் கலைஞர் கலாபூசணம் ஏ.வி. ஆனந்தன் காலமானார்
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 11:51.49 AM GMT ]
ஈழத்தில் பிரபலமான சிற்பக்கலைஞரும் ஓவியருமான கலாபூசணம் ஏ.வி. ஆனந்தன் இன்று காலை மாரடைப்பினால் யாழ். போதனா வைத்தியசாலையில் காலமானார்.
யாழ்ப்பாணம் மல்லாகத்தில் வசித்து வரும் இவர், சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக தனிமரக்குற்றி ஒன்றில் சிற்பம் செய்து பிரபலமடைந்திருந்தார்.
வருடந்தொறும் நினைவு கூறப்படும் சுனாமி நிகழ்வை தனது கலைக்கூடத்தில் நடத்தியும் வந்தார்.
பல கலாசாரப் பாரம்பரியமிக்க சிற்பங்களையும் ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார்.
இந்த ஆண்டில் இலங்கை அரசின் கலாசார அமைச்சினால் வழங்கப்படும் கலாபூசண விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
யாழ்.திருமறைக்கலாமன்றத்தின் முத்த உறுப்பினரான இவரின் இறுதிக் கிரிகைகள் நாளை அவரின் இல்லதில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


மட்டக்களப்பில் ஆட்சேர்ப்புத் திட்டம் தயாரிக்கப்படாமைக்கு ஆட்சேபித்து ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 12:46.38 PM GMT ]
கிழக்கு மாகாணணசபையின் உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு திட்டம் சரியாக தயாரிக்க வலியுறுத்தியும் இதுவரை தயாரிக்கப்படாததை கண்டித்தும் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகஸ்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இங்கு ஆட்சேர்ப்பு திட்டம் தயாரிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எமது விடயத்தில் ஏன் இந்த பாராமுகம், நீண்ட கால அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குங்கள், நகரத்தில் சுத்தம் சுகாதாரம் பேணும் எமக்கு இனி வேதனம் இல்லையா? ஆட்சேர்ப்பு திட்டத்தில் 2006க்கு முன்னர் நியமனம் பெற்றவர்களுக்கு வயது கல்வித் தகமையில் சலுகை அடிப்படையில் வழங்க வேண்டும், ஆட்சேர்ப்பு திட்டம் எப்போது? பதவி உயர்வு எப்போது? சம்பள உயர்ச்சி எப்போது? ஆட்சேர்ப்பு திட்டம் தயாரிக்கும் போது வடக்கு, கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகதத்தர் சங்கத்தின் கருத்துக்களும் பெறப்பட்டு அவை பரிசிலிக்கப்பட்டு உள்வாங்கப்படல் வேண்டும், நீண்டகால அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் வெற்றிடத்துக்கு அமைவாக சேவை மூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படல் வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா, கி.துரைராஜசிங்கம், இரா.துரைரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சனை கேட்டறிந்தனர்.
இவ்விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அரசாங்க உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நாங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி தீர்வு ஒன்றினைப் பெறுவோம் என்று தெரிவித்தார்.
அத்துடன் ஆர்ப்பாட்டம் தொடர்பான மகஜர் ஒன்றும் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு வழங்கப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten