தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் - யோகேஸ்வரன் எம்பி சந்திப்பு!- மாவட்ட நிலைமைகள் குறித்து தூதுவரிடம் எடுத்துரைப்பு!


சீதைக்கு ஆலயமா? இராவணனுக்கே முதலில் அமைக்க வேண்டும்!- ராவணா பலய அமைப்பு எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 08:03.10 AM GMT ]
நுவரொலியா மாவட்டத்தில் ஹக்கலை – திவுரும்பொல பிரதேசத்தில் சீதைக்கு ஆலயம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டத்திற்கு ராவணா பலய அமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இந்த ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
சீதை அம்மனுக்கு ஆலயம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இராவண மன்னனுக்கு சிலையொன்று நிறுவப்பட வேண்டும். இராவண மன்னன் வரலாற்றுடன் எமக்கு முக்கியமான ஒருவர், இராவணனால்தான் சீதை பத்தினி என்ற பெயரை பெற்றார்.
இராவணன் சீதை பலவந்தப்படுத்தியிருந்தால் அவர் அந்த தகுதியை பெற்றிருக்க மாட்டார். பல வருடங்களாக சீதையை சிறைவாசம் வைத்திருந்தாலும் அவருக்கு ராவண மன்னன் இடையூறு விளைவித்ததில்லை.
எனவே, இராவணன் ஒரு கொள்கையை கடைபிடிப்பவர் என்று புலப்படுவதால், முதலில் அவருக்கே ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.
பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரம் கொண்ட இந்திய மத்திய பிரதேஷ் பிராந்தியத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங்க சௌவான், இலங்கையில் சீதை அம்மையாருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்று அண்மையில் தெரிவித்த கருத்துக்கு அமையவே ராவணா பல அமைப்பு தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் தாம் வெற்றிபெற்றால் நிச்சயமாக சீதையம்மனுக்கு தேவாலயம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய பிரதேஷ் முதலமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் தயானந்த் நிதியத்தின் ஊடாக சீதையம்மன் ஆலயம் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, பசுக்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கோட்டை போதி மரத்திற்கு அருகாமையில் சத்தியாக்கிரகம் மற்றும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சிங்கள ராவய அமைப்பு தயாராகின்றது.
கால்நடைகளை பலியிடுவதை தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தும் நோக்கிலேயே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அக்மீமன தயாரத்தன தேரரர் தெரிவித்தார்.
பௌத்த பிக்கு ஒருவர் அண்மையில் கண்டி தலதா மாளிகையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டமையை அடுத்தே பசுக்கொலை தொடர்பாக சமூகத்தில் மீண்டும் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தை அடுத்து இலங்கையில் குடியியல் அமைப்புகள் கால்நடை பலியிடல் மற்றும் பசுக்கொலைக்கு எதிராக குரலெழுப்புவதுடன், அதனை தடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் - யோகேஸ்வரன் எம்பி சந்திப்பு!- மாவட்ட நிலைமைகள் குறித்து தூதுவரிடம் எடுத்துரைப்பு!
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 08:41.25 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் அம்மையார் உடனான சந்திப்பு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பகல் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் மக்களின் தேவைகள் குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட நிலைமைகள் குறித்தும் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடல் மற்றும் புத்தர் சிலை நகர வாயிலில் வைக்கப்படும் விடயம் சார்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள விமானப்படை வீடமைப்பு விடயம், வவுணதீவு பிரதேசத்தில் 25000 ஏக்கர் காணி ஊர்காவல் படையினருக்கு விவசாயத்துக்கு வழங்கப்பட்டமை உட்படவும், வாகரை கடற்பகுதியில் வெளிமாவட்டத்தினரின் அட்டை பிடிப்பால் ஏற்படும் தீமைகள் பற்றியும், மக்கள் அன்றாட சிறு சுயதொழில் நடவடிக்கையில் ஏற்படுத்தப்படும் இராணுவ தலையீடுகள் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் தெளிவாக தூதுவரிடம் விளக்கினார்.
அத்தோடு இரு தினங்களுக்கு முன் ஆலயங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் யுத்தத்தின் பின்பே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கோறளைப்பற்று பிரதேசத்தையும், கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்தையும் பிரிக்கும் கிண்ணையடி முருக்கன்தீவு ஆகிய பகுதிகளை பிரிப்பதுமான ஆற்றுக்கு பாலம் இடுதல் சம்பந்தமாகவும் தூதுவரிடன் பேசப்பட்டது.
இவர் இதற்கு தமக்கு ஒரு மடலை வழங்கி இதன் பிரதிகளை அரசாங்க அதிபர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைமை காரியாலயத்துக்கும் அனுப்புமாறு கோரினார்.
அத்தோடு வாழைச்சேனை தேசிய கடதாசி கம்பனிக்கு உதவிகள் வழங்கி இத்தொழிற்சாலையை கட்டி எழுப்ப வேண்டிய அவசியம் பற்றியும் தூதுவரிடம் கோரப்பட்டது.
மேலும் பல விடயங்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கும் தூதுவருக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றன.

Geen opmerkingen:

Een reactie posten