[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 02:42.11 AM GMT ]
அவரது ஊடக செயலாளர் ஹபீஸ் இதனை உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர் உடனடியாக நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைப்பது தொடர்பில் இன்று அமச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவுள்ளது.
அத்துடன் உத்தேச அரசியல் யாப்ப்பில் காணப்படுகின்ற மாகாண அதிகார குறைப்புகள் தொடர்பான பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இவற்றில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே அமைச்சர் இலங்கை திரும்பியுள்ளார்.
இதேவேளை இன்று மாலை வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிப்பதற்கான புதிய ஒழுங்குவிதி தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் அமைப்புக்கள் குறித்து தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்!- பொதுபல சேனா
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 02:45.00 AM GMT ]
நாட்டில் இயங்கும் முஸ்லிம் அமைப்புகள் தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று வெவ்வேறு வழிகளில் இரண்டு முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீண்டும் ஹலால் பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.
முன்னர் பள்ளிகளில் மாத்திரம் காணப்பட்ட மத்ரசா பாடசாலைகள் தற்போது நாட்டில் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. அவற்றின் மூலம் முஸ்லிம் கடுமைப் போக்குவாதம் பரப்பப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten