தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

வட மாகாண சபை தீர்மானம் குறித்த செய்தியை சில தெற்கு ஊடகங்கள் இருட்டடிப்பு !

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று நேற்றைய தினம் வட மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கான ஆதாரங்களைத் திரட்டி குறித்த தீர்மானம் அமையப்பெற்றிருந்தது.
இந்தத் தீர்மானம் குறித்தோ, அல்லது தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் விடயங்கள் குறித்தோ தெற்கில் உள்ள பல சிங்கள, ஆங்கில ஊடகங்கள் செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. குறிப்பாக மும்மொழிகளில் ஊடகங்களை நடத்தும் ஊடக நிறுவனங்களில் சில ஊடகங்கள் தமிழில் மாத்திரம் இனப்படுகொலைத் தீர்மானம் குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது.
மும்மொழி ஊடகங்களைக் கொண்ட ஊடக நிறுவனங்களின் சிங்கள ஊடகங்களில் வெளியிடப்படும் தெற்கு அரசியல் குறித்த செய்திகள் தமது தமிழ் ஊடகங்களிலும் வெளியிடப்படுவதுண்டு. எனினும் வடக்கு மாகாண சபையின் இனப்படுகொலை குறித்த செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்துள்ளன. இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சிங்கள மக்களை நோக்கியும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தார்.
இந் நிலையில் குறித்த செய்திகளை சிங்கள மக்களுக்குச் சென்றடையாத வகையில் சில ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்திருப்பது ஊடக அறமற்றது என்று ஊடகத்துறை சார் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
http://www.athirvu.com/newsdetail/2259.html

Geen opmerkingen:

Een reactie posten