[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 05:13.02 PM GMT ]
கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
கட்சியின் பேச்சாளராக இதுவரை காலமும் அமைச்சர் கயன்த கருணாதிலக்க பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கமிட்டிகளை நியமிக்கும் பொறுப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பலம் கட்சிக்குள் ஓங்கியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjt3.html
அரசியல் கைதிகள் என்று யாருமில்லை: பொலிஸார்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 04:44.03 PM GMT ]
தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் அரசியல் கைதிகளின் வகையீட்டுக்குள் உள்ளடக்கப்பட மாட்டார்கள்.
குண்டுகளை வெடிக்கச் செய்தல், மனித படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களே இவர்களாகும்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்படக் கூடிய புலி உறுப்பினர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளில் 50 – 60 வீதம் வரையில் பூர்த்தியாகியுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjt2.html
Geen opmerkingen:
Een reactie posten