தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

அதிகாரம் சந்திரிக்காவிடம்

இராணுவத் தளபதி அடுத்த வாரம் ஓய்வு பெற்றுக்கொள்வார்
இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் தயா ரட்நாயக்க அடுத்த வாரம் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார். கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் சேவை நீடிப்பின் அடிப்படையில் தயா ரட்நாயக்க இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான விசாரணைகளின் போது முக்கிய சாட்சிகளில் ஒருவராக தயா ரட்நாயக்க கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ சூழ்ச்சித் திட்டத்துடனும் தயா ரட்நாயக்கவிடம் குற்ற புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓராண்டு கால சேவை நீடிப்பின் அடிப்படையில் இராணுவத் தளபதியாக கடமையாற்றி வந்த தயா ரட்நாயக்கவின் பதவி, மேலும் நீடிக்கப்பட மாட்டாது என மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த வாரமளவில் இலங்கையில் புதியதொரு இராணுவத் தளபதி நியமிக்கப்பட உள்ளார்.

ரஸ்யாவிற்கான இலங்கைத் துணைத் தூதுவர் மேஜர் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா உள்ளிட்ட சில சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் இராணுவத் தளபதி பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முப்படைத் தளபதிகளும் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதியும் பணி நீக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
14 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423914166&archive=&start_from=&ucat=1&

இராணுவ அதிகாரிகள் 10பேர் சேவையில் இணைப்பு
2010 ஜனாதிபதி தேர்தலின் பின்னர், கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டபட்ட இராணுவ அதிகாரிகள் 10 பேரையும் மீண்டும் சேவையில் இணைத்துகொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இதில் மேஜர் ஜெனரல், பிரிகேடியர்கள் 5 பேர். கேர்ணல், லெப்டினன் கேர்ணல், கேப்டன்கள் இருவர் அடங்குவர்.
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423914512&archive=&start_from=&ucat=1&
தலதா மாளிகையில் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன்! (படங்கள் இணைப்பு)
புதிய பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் இன்று தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், அவர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

மாநாயக்க தேரர்கள் பிரதம நீதியரசர் தனது பணியை சரியான முறையில் செய்ய ஆசி வழங்கியுள்ளனர்.

14 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423914841&archive=&start_from=&ucat=1&
அதிகாரம் சந்திரிக்காவிடம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனை பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கட்சியின் மத்திய குழு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யும் அதிகாரம் இந்த ஆலோசனை பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை பேரவையின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர்களான டி.எம். ஜயரத்ன, ரட்ணசிறி விக்ரமநாயக்க ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இன்று கூடிய சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு என்பன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தெரிவு செய்ய தீர்மானித்தாக கட்சியின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
14 Feb 2015

Geen opmerkingen:

Een reactie posten