13 Feb 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423860100&archive=&start_from=&ucat=1&
மட்டக்களப்பில் இளம் பெண் தீயில் கருகி மரணம்!
|
மட்டக்களப்பில் இளம்பெண் ஒருவர் தீயில் கருகி பலியான சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எரிந்த நிலையில் எடுத்து வரப்பட்ட குறித்த இளம் பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.ஆரையம்பதி மாவிலங்கத்துறையைச் சேர்ந்த 27 வயதுடைய வை. ஜீவராகினி என்ற திருமணமான பெண்ணே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் இளம்பெண் ஒருவர் தீயில் கருகி பலியான சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எரிந்த நிலையில் எடுத்து வரப்பட்ட குறித்த இளம் பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.ஆரையம்பதி மாவிலங்கத்துறையைச் சேர்ந்த 27 வயதுடைய வை. ஜீவராகினி என்ற திருமணமான பெண்ணே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. |
13 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423860316&archive=&start_from=&ucat=1&
புதிய அரசின் நடவடிக்கையால் குழம்புகிறதாம்! டக்ளஸ்
|
சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் நாம் சுமுகப் பேச்சுக்களின் மூலம் முன்னெடுத்திருந்தோம்.
இதன்பிரகாரம் சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீடுகளைப் படிப்படியாக குறைத்து, இறுதியில் முற்றாக அதனை அகற்றும் நிலையை உருவாக்கி வந்திருந்தோம். ஆனால் இன்று முப்படைகளுக்கும் பொலிஸாருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த 2ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தமிழ் பேசும் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.
இதுகுறித்து அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:- யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், இந்நாட்டில் வடக்கு மற்றும் தென்பகுதி மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக சுதந்திர தின உரையின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதியின் இக்கருத்தை ஈ.பி.டி.பியினராகிய நாம் வரவேற்றிருந்தோம். இந்நிலையில், முப்படைகளுக்கும் பொலிஸாருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் நடவடிக்கையானது எமது மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதால் தேசிய நல்லிணக்கம் குறித்து கேள்விகள் எழுகின்றன.
இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் அகன்று, பரஸ்பர நம்பிக்கைகள் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கில் உரிமைக்குக் குரல் கொடுத்து உறவுக்குக் கரம் கொடுத்தே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வருகின்றோம்.
சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் நாம் சுமுகப் பேச்சுக்களின் மூலம் முன்னெடுத்திருந்தோம். இதன்பிரகாரம் சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீடுகளைப் படிப்படியாக குறைத்து, இறுதியில் முற்றாக அதனை அகற்றும் நிலையை உருவாக்கி வந்திருந்தோம்.
இந்நிலையில், தமிழ் பேசும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை நோக்கிப் படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், பொலிஸாருக்கு உரிய அதிகாரங்கள் முப்படைகளுக்கும் வழங்கியிருப்பதானது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.
எனவே, தேசிய நல்லிணக்கத்தின்பால் தமிழ் பேசும் மக்களும் சுயமாக ஈர்க்கப்படக் கூடியதான முயற்சிகளையே அரசு மேற்கொள்ள வேண்டிய நிலையில், தமிழ் பேசும் மக்களிடையே தற்போது ஏற்பட்டிருக்கும் அச்சத்தையும், பீதியையும் போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். |
13 Feb 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423860716&archive=&start_from=&ucat=1&
புதிய அரசின் நடவடிக்கையால் குழம்புகிறதாம்! டக்ளஸ்
|
சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் நாம் சுமுகப் பேச்சுக்களின் மூலம் முன்னெடுத்திருந்தோம்.
இதன்பிரகாரம் சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீடுகளைப் படிப்படியாக குறைத்து, இறுதியில் முற்றாக அதனை அகற்றும் நிலையை உருவாக்கி வந்திருந்தோம். ஆனால் இன்று முப்படைகளுக்கும் பொலிஸாருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த 2ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தமிழ் பேசும் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.
இதுகுறித்து அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:- யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், இந்நாட்டில் வடக்கு மற்றும் தென்பகுதி மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக சுதந்திர தின உரையின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதியின் இக்கருத்தை ஈ.பி.டி.பியினராகிய நாம் வரவேற்றிருந்தோம். இந்நிலையில், முப்படைகளுக்கும் பொலிஸாருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் நடவடிக்கையானது எமது மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதால் தேசிய நல்லிணக்கம் குறித்து கேள்விகள் எழுகின்றன.
இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் அகன்று, பரஸ்பர நம்பிக்கைகள் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கில் உரிமைக்குக் குரல் கொடுத்து உறவுக்குக் கரம் கொடுத்தே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வருகின்றோம்.
சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் நாம் சுமுகப் பேச்சுக்களின் மூலம் முன்னெடுத்திருந்தோம். இதன்பிரகாரம் சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீடுகளைப் படிப்படியாக குறைத்து, இறுதியில் முற்றாக அதனை அகற்றும் நிலையை உருவாக்கி வந்திருந்தோம்.
இந்நிலையில், தமிழ் பேசும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை நோக்கிப் படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், பொலிஸாருக்கு உரிய அதிகாரங்கள் முப்படைகளுக்கும் வழங்கியிருப்பதானது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.
எனவே, தேசிய நல்லிணக்கத்தின்பால் தமிழ் பேசும் மக்களும் சுயமாக ஈர்க்கப்படக் கூடியதான முயற்சிகளையே அரசு மேற்கொள்ள வேண்டிய நிலையில், தமிழ் பேசும் மக்களிடையே தற்போது ஏற்பட்டிருக்கும் அச்சத்தையும், பீதியையும் போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். |
13 Feb 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423860716&archive=&start_from=&ucat=1& |
|
|
|
Geen opmerkingen:
Een reactie posten