தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 februari 2015

யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியாவதை தடுக்க முடியும் - மங்கள சமரவீர

தேர்தல் இலங்கையை புதிய திசையில் பயணிக்கவும் பொறுப்புக்கூறலுக்கான கதவைத் திறந்தும் விட்டுள்ளது (படம் இணைப்பு)
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இலங்கையை புதிய திசையில் பயணிக்க வைத்துள்ளதாகவும், பொறுப்புக்கூறலுக்கான கதவைத் திறந்து விட்டுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், இலங்கையின் மனித உரிமைகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தச் சந்திப்புக்குப் முன்னர் மங்கள சமரவீரவும், ஜோன் கெரியும் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினார். இதன்போது, கருத்து வெளியிட்ட மங்கள் சமரவீர, அமெரிக்காவுடன் கடந்த சில ஆண்டுகளாக இருந்த நெருடலான உறவு நிலைக்கு முடிவு கட்டி, நெருக்கமான, உறவை மீள ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனுடன் நெருக்கமாக பணியாற்ற இலங்கை விரும்புவதாகவும், புதிய அரசாங்கம் அமெரிக்காவை அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை என்றும், மிகப் அபெரிய வாய்ப்பாக கருதுவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, தேர்தல் இலங்கையை புதிய திசையில் பயணிக்க வைத்துள்ளதாகவும், பொறுப்புக்கூறலுக்கான கதவைத் திறந்து விட்டுள்ளதாகவும், மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் காக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஊழலுக்கு எதிராகப் போராடும், அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
13 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423857927&archive=&start_from=&ucat=1&

இன்டர்போலின் உதவியுடன் பசில் ராஜபக்ஸவின் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்படும்
சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் உதவியுடன் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸவின் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன சீன ஊடகமொன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற மிகப் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாரிய நிதி மோசடிகளுடன் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் நிறைவைத் தொடர்ந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு விஜயம் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெசில் ராஜபக்ஸவிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
13 Feb 2015

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423858063&archive=&start_from=&ucat=1&

சுதந்திரக் கட்சியின் யாப்பில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது
நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்வது குறித்தும் இன்று நடைபெற்ற சுதந்திரக் கட்சி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிறைவேற்றுக்குழு நாளைய தினம் கூட உள்ளதாகவும் இதில் கட்சி யாப்பு விதி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி பேசப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் பிரதமர் வேட்பாளர் பற்றி பேசப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்தரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. நாளைய தினம் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மிக முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
13 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423858238&archive=&start_from=&ucat=1&

யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியாவதை தடுக்க முடியும் - மங்கள சமரவீர
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியாவதை தடுக்க முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியை சந்தித்த பின்னர் வாசிங்டனில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயெ அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்,

குறிப்பிட்ட அறிக்கையை எப்போது வெளியிடுவது என்ற முடிவை எடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மற்றும் மனித உரிமை பேரவையின் தலைவரே என்றாலும்,தான் மார்ச் மாத அமர்வில் அறிக்கை வெளியாகாது என்பது குறித்து நம்பிக்கை கொண்டிருருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


மார்ச் 25 திகதி வெளியாகவுள்ள அறிக்கையை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் வரை தாமதிக்கச்செய்யும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன் ஐரொப்பிய ஓன்றிய நாடுகளின் உதவியை இந்த விவகாரத்தில் எதிர்பார்க்கிறாரா என்ற கேள்விக்கு அடுத்த சில மாதங்களில் அனைத்து நண்பர்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
13 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423858400&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten