தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 augustus 2013

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! திருச்சியில் வைகோ! நூற்றுக்கணக்கானோர் கைது

வடக்கின் வசந்தம்: தவறைச் சுட்டிக் காட்டிய கிளிநொச்சி பொறியியலாளரை தாக்கிய அமைச்சர் ரிஷாத்தின் உறவினர்
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 12:10.21 PM GMT ]
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் வழி நடத்தப்பட்டு வரும் கிராமிய வீதிகள் புனரமைப்பில் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள புளியம் பொக்கணை அம்மன் கோவில் வீதி, MAGA ஒப்பந்ததாரரால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.
மேற்படி வீதியின் வேலைத்திறனைச் சரி பார்ப்பதற்கென கிளிநொச்சி வீதி அதிகார சபையில் இருந்து பொறியியலாளரான குழந்தைவேல் வில்வராசா ( வயது 35 )தனது தொழினுட்ப ஆலோசகர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் குறித்த வீதியின் அபிவிருத்தியினைச் சென்று பார்வையிட்ட பொழுது வேலைத் தரம் மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டதனைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
6 அங்குல உயரத்திற்குக் கொங்கிரீற் போடப்பட வேண்டிய நிலையில் MAGA ஒப்பந்ததாரரால் 4 அங்குல உயரத்திற்கு மாத்திரம் தரம் குறைந்த சீமெந்துக் கலவையினைக் கொண்டு கொங்கிரீற் போடப்பட்டு வந்துள்ளது.
மேற்குறித்த குறையினைச் சுட்டிக் காட்டிய பொறியியலாளரை அங்கு பணியில் நின்ற MAGA ஊழியர் தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளார். அங்கிருந்து புறப்பட்டுத் தமது அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்த பொறியியலாளர் குழுவினை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இடை மறித்து, �வீதி அபிவிருத்திப் பணியினை எதற்காக இடை நிறுத்தினாய் எனக் கேட்டு பொறியியலாளரின் கன்னத்தில் ஓங்கி கடுமையாகத் தாக்கியதுடன் கைத்துப்பாக்கியினை எடுத்து மிரட்டியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் நெருங்கிய உறவினரான ஆர்ஷிக் எனக் கூறப்படுகிறது. கடுமையான உடற்தாக்கங்களுக்கு உள்ளான குறித்த பொறியியலாளர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விடயம் குறித்து பொலிஸ் நிலையத்திலும் மேலதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் தாக்குதல் நடாத்தியவர்களுக்கெதிராக எடுக்கப்படவில்லை.
இவ் விடயம் குறித்து பிரதம பொறியியலாளரான சஞ்சீவராஜாவுடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தொடர்பு கொண்டு தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இத் திட்டங்கள் MAGA ஒப்பந்ததாரரால் மேற்கொள்ளப்படுவதால் இத்தகைய தரம் குன்றிய வேலைத் திட்டங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டாலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என்பது வெளிப்படை என மக்கள் விசனப்படுவதுடன், எமது தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் தென்னிலங்கையில் இருந்து வரும் ஒப்பந்ததாரர்கள் தரம்குன்றிய வேலைகளினைச் செய்து எமக்கென வரும் நிதிகளைக் கொள்ளையடித்து வருவதைத் தடுப்பதற்கு வழி என்ன எனக் கேள்வியெழுப்புகின்றனர்.

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! திருச்சியில் வைகோ! நூற்றுக்கணக்கானோர் கைது
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 07:37.51 AM GMT ]
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று பிரதமர் வருகையைக் கண்டித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தி, வைகோ மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது பேசிய வைகோ, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடைபெற்றால், அதன் மூலம் 53 நாடுகளின் தலைவராக இலங்கை அதிபர் ராஜபக்ச பொறுப்பேற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது.
ஒரு வேளை இந்தியா பங்கேற்றால், இவ்வளவு நாள் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகப் போய்விடும் என்பதால், நாங்கள் "பாரதப் பிரதமரே திரும்பிப் போ" என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளோம் என்று கூறினார்.
பிரதமர் வருகை! கறுப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது
திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பிற கட்சித் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியை அடுத்த திருமயத்தில் பிஎச்இஎல் நிறுவனத்தின் ஒரு ஆலையைத் தொடக்கி வைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை திருச்சி வருகிறார்.
தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, அதற்கெல்லாம் செவி கொடுக்காத பிரதமர், ஒரு ஆலையைத் தொடக்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக தமிழகம் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக உட்பட் பல்வேறு கட்சிகள் சார்பில் கெறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேச பொதுவுடையை கேட்சித் தலைவர் மணியரசன் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கணக்கோனார் திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
பிரதமர் வருகையின் போது கறுப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten