[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 02:46.08 AM GMT ]
மூன்று விடுதிகளை முற்றுகையிட்ட போது 27 இளம் யுவதிகள் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாடகைக்கு விடுதி அறைகளை வழங்கும் போர்வையில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்த்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாளிகாவத்தை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கொழும்பு நகரில் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் போர்வையில் பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினர் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது: ருவான் வணிகசூரிய- களுத்துறை கடற்படை முகாமில் வெடிப்புச் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 02:46.05 AM GMT ]
ஆர்ப்பாட்டக்கார்ர்களை கலைக்கும் நோக்கில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
சர்ச்சைக்குரிய தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதாக ஒப்புக்கொண்டதனைத் தொடர்ந்து மக்கள் களைந்து சென்றனர்.
எனினும், அதன் பின்னர் வந்த சிலர் இராணுவத்தினர் மீது தாக்குதல்நடத்தினர்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத காரணத்தினால் பொலிஸார் இராணுவத்தினரின் உதவியை நாடியிருந்தனர்.
குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் பொலிஸார் இராணுவத்தினரின் உதவியை நாட முடியும் என அவர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
களுத்துறை கடற்படை முகாமில் வெடிப்புச் சம்பவம்
களுத்துறை கடற்படை முகாமில் வெடிப்புச் சம்வமொன்று இடம்பெற்றுள்ளது.
முகாமிற்கு வெளியே இருந்து வெடிபொருளொன்று வீசப்பட்டுள்ளது. முகாமிற்கு உள்ளே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கடற்படையினர் களுத்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்தில் முகாமின் சொத்துக்களுக்கோ அல்லது நபர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten