தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 augustus 2013

இரகசிய முகாம்களில் முன்னாள் போராளிகள் சித்தரவதை: நவிப்பிள்ளை கேள்வி !

இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் சித்தரவதை செய்யப்பட்டமை தொடர்பாக நவநீதம் பிள்ளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பியதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. கொழும்பு பொரள்ளையில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு நேற்று நவநீதம் பிள்ளை சென்றிருந்தார். 

அங்கு இரண்டு மணித்தியாளங்கள் வரை கலந்துரையாடிய அவர் தமிழ் அரசியல் கைதிகளின் விடயங்கள் தொடர்பாகவும் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் உரையாடிய நவநீதம் பிள்ளை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களையும் வழங்கியதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

Geen opmerkingen:

Een reactie posten