தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 augustus 2013

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை அவசியம்: ஐரோப்பிய ஒன்றியம்

தேசிய நல்லிணக்கமே நீண்டகால அபிவிருத்திக்கு உதவும்: ஜப்பான்
[ வெள்ளிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2013, 05:03.40 PM GMT ]
தேசிய நல்லிணக்கமே நாட்டின் நீண்ட கால அபிவிருத்தியை தக்கவைக்கும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவிலுள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் 283,432 டொலர்களை இன்று ஜப்பான் அரசாங்கம் வழங்கியது.
இந்த நிதி மூலமான செயற்திட்டம் ஜப்பானிய அரச சார்பற்ற அமைப்பான பார்சிக் என்ற அமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த அரச சார்பற்ற அமைப்பு 2004 ஆம் ஆண்டு முதல் வடக்கில் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIQUMWnwz.html#sthash.lxn8deCj.dpuf

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை அவசியம்: ஐரோப்பிய ஒன்றியம்
[ வெள்ளிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2013, 04:46.30 PM GMT ]
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில்,, சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
இலங்கையின் தென்பகுதியில் 1970-1980 ஆண்டுக்களில் பலர் காணாமல் போயினர்.
இதனை தவிர போர் காலத்தின் போது அதிகமானோர் காணாமல் போயியுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த பிரச்சினையை ஆராய அண்மையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தக்குழு உரியமுறையில் நீதியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
இதுவே நாட்டை முன்னேற்ற வழியில் இட்டுசெல்ல வழிவகுக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 See more at: http://www.tamilwin.net/show-RUmryIQUMWnwy.html#sthash.6gSdWnrx.dpuf

Geen opmerkingen:

Een reactie posten