தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

நவிப்பிள்ளை நாட்டுக்குள் வர -மகிந்த பெலரூஸ் நாட்டுக்கு எஸ்கேப் !

சற்று முன்னர் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவனீதம் பிள்ளை அவர்கள் இலங்கை சென்றடைந்துள்ளார் என அறியப்படுகிறது. ஆனால் அவர் இலங்கை விமானநிலையம் சென்றடைய சில மணி நேரங்களுக்கு முன்னதாக மகிந்த ராஜப்க்ஷ , பிளேனைப் பிடித்து பெலரூஸ் என்னும் நாட்டுக்குச் சென்றுவிட்டார். இலங்கை அரச படைகள் விடுதலைப் புலிகளோடு நடந்த இறுதி யுத்தத்தில் பாரிய போர்குற்றங்களில் ஈடுபட்டாகள் என்ற, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் , அக் கூட்டுப்படைகளின் தளபதியாக மகிந்தரே இருக்கிறார். இந் நிலையில் அவர் 3 நாள் அரச சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு பெலரூஸ் சென்றுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. 

இது நவிப்பிள்ளையை வேண்டும் என்றே அவமதிக்கும் ஒரு செயலாக இருக்கலாம் என்றும், இல்லையென்றால் மகிந்தர் இலங்கையில் தங்கியிருந்தால் அவர் நவிப்பிள்ளையை நிச்சயம் பார்க்கவேண்டிய சூழ் நிலை உருவாவதைத் தடுக்கவே அவர் பெலரூஸ் சென்றுள்ளார் என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறு இருப்பினும், மகிந்தர் நவிப்பிள்ளையை சந்திக்க மாட்டார் என்றே அறியப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten