[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 10:34.46 AM GMT ]
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர்
ஜி.எ.சந்திரசிறி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார்.
ஜி.எ.சந்திரசிறி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார்.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்குரிய ஆசிரிய நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன.
நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், தீவகம் ஆகிய பகுதிகளில் கடமையாற்றவுள்ளனர்.
இன்று நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் கடமையைப் பொறுப்பேற்பர்.
பின்னர் இரண்டு வாரம் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொண்ட பின் நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் கடமைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
2ம் இணைப்பு
யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையில் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதற்கான நியமனக் கடிதங்களை யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வழங்கி வைத்துள்ளார்.
யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தலமையில் இந்த நிகழ்வுகள் இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கடந்த முதலாம் திகதி யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையில் 321 பேர் உள்வாங்கப்பட்டனர். அவர்களுக்கு 6 நாள் பயிலுநர் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
எனவே அவர்களுக்கான பயிற்சிகள் நேற்றுடன் நிறைவு பெற்றதனையடுத்து இவர்கள் பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதற்கான நியமனக் கடிதங்கள் இன்று யாழ். மாவட்ட அரச அதிபரினால் பிரதேச செயலகர்களிடம் கையளிக்கப்பட்டன.
அவர்கள் ஊடாக குறித்த நியமனக் கடிதங்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுள்ளது.
அதன்படி நெடுந்தீவில் 8 பேரும், ஊர்காவற்றுறையில் 20 பேரும், காரைநகரில் 11 பேரும், வேலையில் 23 பேரும், யாழ்ப்பாணத்தில் 21 பேரும், நல்லூரில் 29 பேரும், கோப்பாயில் 27 பேரும், உடுவிலில் 23 பேரும், தெல்லிப்பழையில் 31 பேரும், சங்கானையில் 19 பேரும், சண்டிலிப்பாயில் 24 பேரும், பருத்தித்துறையில் 15பேரும், கரவெட்டியில் 14பேரும், சாவகச்சேரியில் 39 பேரும், மருதங்கேணியில் 17 பேரும் பொறுப்பேற்றுள்ளனர்.
இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களிலும் இவர்கள் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பதில் அரச அதிபர் ரூபினி வரதலிங்கம், பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரதேச செயலகர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது: ஜி.கே.வாசன் தெரிவிப்பு
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 10:19.31 AM GMT ] [ விகடன் ]
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களுக்கு மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் துயரத்தில் உள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பேசினேன். சிறையில் தமிழக மீனவர்களுக்கு எந்தவித தொந்தரவும் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தினேன்.
இலங்கை கடற்படை கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள புதிய கோட்பாடுகளை வரையறுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சமஉரிமை அளிக்க வேண்டும். அவர்கள் நலன் காப்பாற்றப்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப இரு நாடுகளின் நல்லுறவுகள் பாதிக்காத வகையில் கச்சத்தீவை மீட்கும் விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten