மாணவர்கள் மீது ஆசிரியர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம்!- யாழ். கல்விச் சமூகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 12:12.01 AM GMT ]
இச்சிறுமி தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அம்மாணவியும் மேலும் அவ்வகுப்பில் படிக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த உளத்தாக்கத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
இவ்விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட சாரதா ஆசிரியரை சந்திக்க முயன்றும் முடியாமல் போனதால் அங்கு கற்பிக்கும் சக ஆசிரியரான சபானந்தம் அவர்களிடம் முறையிட்ட போது "அவ் ஆசிரியர் பிள்ளைகளுக்கு இவ்வாறு கண்டித்தால் தான் உருப்படும்" என்று கூறியுள்ளார்.
குறிப்பாக எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் பல வழிகளிலும் உளத்தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த விடயம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெற்றோரை அழைத்து சுமுகமான முறையில் உறவுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இனிவரும் காலங்களில் எமது ஆசிரியர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமெனவும் இன்றைய செல்வங்கள் நாளைய தலைமுறையினர் என நினைத்து அன்பாகவும் ஆதரவாகவும் பழகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பொது பல சேனாவுக்கு எதிராக தென்னிலங்கை கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 12:24.41 AM GMT ]
மக்கோனை லக்கல குமார கந்தையிலுள்ள தேவாலயத்துக்குரிய மாதா திருச்சொரூபத்திற்கு முன்னால் இருந்த சந்திரவட்டக்கல் வடிவத்திலான வாசற்படியை இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலர் அங்கிருந்து பலவந்தமாக அகற்றிச் சென்றுள்ளனர்.
அந்த சம்பவத்துக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் இன்று காலை முதல் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அந்தப் பிரதேசத்தில் நிலவிய பெரும் பதற்றம் காரணமாக காவல்துறை உயர் அதிகாரிகளும் சிறப்பு அதிரடிப் படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் சந்திரவட்டக்கல்லை அகற்றியவர்கள் தேவாலய நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரிய பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
'சந்திரவட்டக்கல் என்பது அரசர்கள் காலத்திலிருந்து இருந்து வருகின்ற நாட்டின் பாரம்பரிய கலை வடிவம். அது பௌத்த மதத்துக்கு மட்டும் உரியது அல்ல. அது இந்த நாட்டு மக்கள் எல்லோருக்கும் உரிய எங்களின் பாரம்பரிய உரிமை'.அதனை அகற்றிச் சென்றுவிட்டது மட்டுமன்றி அங்கிருந்த கத்தோலிக்க மதகுருமாரையும் அவர்கள் கேவலகமாக பேசியிருந்தார்கள். அதற்கு எதிராகத் தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்' என்றார் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர்.
'சந்திரவட்டக்கல் வாசற்படியை பெயர்த்து எடுத்துச் செல்ல பொது பல சேனா பிக்குமார் பொலிசாருடன் தான் வந்திருந்தார்கள். பொலிசார் அதனை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்' என்றும் அவர் கூறினார்.
பொது பல சேனாவுக்கு அரச அனுசரணை?
இலங்கையில் பொது பல சேனா அமைப்பு தொடர்ச்சையாக பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாகி வருகிறது.
முஸ்லிம்களின் ஹலால் உணவு சான்றிதழ் முறையை ஒழிக்க வேண்டும் என்றும் நாட்டில் மாட்டிறைச்சி வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் நடந்த போராட்டங்களின் போதும், இன்னும் முஸ்லிம்களை நேரடியாகப் பாதிக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் தொடர்பிலும் பொது பல சேனா அமைப்பினர் தொடர்பில் ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியிருந்தன.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான துணிக்கடை ஒன்று கொழும்பில் தாக்கப்பட்ட சம்பவத்தின் போதும் பொது பல சேனா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தம்மீதான குற்றச்சாட்டுக்களை அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அப்போது மறுத்து கருத்துக் கூறியிருந்தார்.
இதேபோல, அண்மைக்காலமாக கிறிஸ்தவ அமைப்புகள் மீதும் கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பிலும் பொது பல சேனா மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2008-ம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பின் புறநகர்ப்பகுதியான தலாஹேனவில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ வழிபாட்டிடம் ஒன்றில் வைத்து பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கிறிஸ்தவ போதகரை காலால் உதைத்து வழிபாட்டிடத்தை தாக்கியதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்புக்கு அரசின் உயர் பீடத்தின் அனுசரணை இருப்பதாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
அந்த அமைப்பின் பயிற்சிக்கூடமொன்றை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச முன்னின்று திறந்துவைத்திருந்தார்.
அது, அந்த அமைப்பை மேலும் ஊக்குவிக்கும் செயல் என்று நாட்டின் நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தமிழோசையிடம் அப்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பௌத்தர்களுக்கே சொந்தம் என்று பொது பல சேனா அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு அகில இலங்கை இந்து மாமன்றமும் கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten