சம்பியன் லீக் ஒரு நாள் கிரிக்கட் போட்டி தொடரின் போது, இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டது தொடர்பில், எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் ராவணா பலய அமைப்பினர் ஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பிற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராவணா பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர், ஆர்ப்பாட்டத்தின் பின்னர் செய்தியாளர் மத்தியில் உரையாற்றுகையில், இலங்கைக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிக்கட் ஏற்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் மகஜர் ஒன்றை கையளித்ததாக அவர் தெரிவித்தார்.
சம்பியன்ஸ் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது, இலங்கையின் சம்பிரதாயத்திற்கு ஒவ்வாத பாடல் ஒன்று ஒலிபரப்பப்பட்டமைக்கு பல தரப்பினரும்
எதிர்ப்பினை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பினை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten