தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 februari 2015

அதிரடி செய்தி: புலிகளின் சில தலைவர்கள் இன்னும் உயிரோடு உள்ளார்கள் ! விடுவிக்கவேண்டாம் என்கிறது TNA !

விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சிலர் , மற்றும் ஆயுதம் ஏந்தாத அரசியல் தலைவர்கள் இறுதி நேரத்தில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார்கள். இவர்களில் பலரை கோட்டபாயவின் ஆட்கள் சுட்டு படுகொலை செய்தார்கள். இருப்பினும் தகவல்கள் சிலவற்றை பெறுவதற்காக இவர்களில் சிலரை ராணுவம் சுட்டுக்கொல்லவில்லை. அவர்களை ரகசிய ராணுவ முகாம்களுக்கு மாற்றியது சிங்கள ராணுவம். இச்சிறைச்சாலைகள் தொடர்பாக தற்போது உள்ள மைத்திரி அரசு தகவல்களை திரட்டி வருகிறது. இன் நிலையில் அவர்களை இலங்கை ராணுவம் கொன்றுவிட்டு, அவர்கள் முன்னரே இறந்துவிட்டார்கள் என்று கூறும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
இன் நிலையில் விடையம் அறிந்த சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை அணுகி, தற்போது உயிரோடு உள்ள புலிகளின் தலைவர்களைவெளியே எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மைத்திரி பால அரசுக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள். எனவே நீங்கள் சொன்னால் அவர்கள் விடுதலை பெறுவார்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை நிராகரித்துவிட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை. பிரபல்யமான புலிகளின் தலைவர்கள் விடுதலை பெற்று வெளியே வந்தால் , எமது செல்வாக்கு குறைந்து போய்விடும் என்று கூறியுள்ளார்கள்.
எபுலிகளின் தளபதியின் மனைவி என்ற ஒரே காரணத்தால் தான் ,பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆனந்திக்கு வாக்களித்தார்கள். அதுபோல மேலும் புலிகளின் தலைவர்கள் வந்து அரசியலில் குதித்தால் எமது நிலை என்ன ஆகும் ? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளாராம். இவர்களின் அரசியல் வாழ்க்கைக்காக , தமது உயிர்களை துச்சமென மதித்து களம் புகுந்த புலிகளை இவர்கள் புறக்கணிக்கிறார்கள். என்ன வோட்டு பொறுக்கி அரசியல் இது ? என தமிழ் உணர்வாளர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

http://www.athirvu.com/newsdetail/2150.html

Geen opmerkingen:

Een reactie posten