மஹிந்தவின் தொலைபேசி அழைப்பை வேண்டும் என்றே நிராகரித்தார் எதிர்க்கட்சித் தலைவர் !
[ Feb 09, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 11395 ]
மஹிந்த ராபஜக்ஸவின் தொலைபேசி அழைப்புக்களை வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா நிராகரித்து வந்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் அதிபர் மஹிந்தவின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்த மூன்றாம் தவணைக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தால் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு பிரதமர் பதவி வழங்குவதாக இணங்ககப்பட்டிருந்தது.
எனினும் தற்போது மஹிந்த ராஜபக்ஸ பல தடவைகள் நிமால் சிறிபால டி சில்வாவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், முயற்சி பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் தொலைபேசி அழைப்பிற்கு, எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரே பதிலளித்துள்ளார். பின்னர் தொடர்பு கொள்வார் என அறிவித்த போதிலும் இதுவரையில் பதிலளிக்கவில்லை எனத் தெரி விக்கப்படுகிறது. ஒரு காலத்தில் மகிந்த ராஜபக்ஷ எபோது தொலைபேசியில் அழைப்பார் என்று நிமால் காத்திருந்தார். அழைத்தால் உடனே அலரி மாளிகை செல்வார். ஆனால் பதவி இல்லையென்றால் நாய் கூட மதிக்காது என்பதனை மகிந்த ராஜபக்ஷ இப்போது நன்றாக உணர்ந்திருப்பார் அல்லவா ?
http://www.athirvu.com/newsdetail/2228.htmlசந்தர்ப்பங்களை கோட்டை விடும் தமிழ் தேசிய தலைமைகள்: இவர்களை வைத்து என்ன செய்வது ?
[ Feb 09, 2015 03:10:19 PM | வாசித்தோர் : 13400 ]
தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் மிக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல புதிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் தேசிய தலைமைகள் இரு விடயங்களையும் கோட்டை விட்டே வந்து இருக்கின்றன என்பது கடந்த கால வரலாறாகவும், நிகழ் கால நிதர்சனமாகவும் உள்ளது. தற்போது இலங்கையில் நிறுவப்பட்டுள்ள அரசு தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வை காணும் வல்லமையுள்ள அரசாக இருக்கிறது எனலாம். ஏன் என்றால் ரணில் கட்சி ஆட்சியை நடத்துகிறது. எதிர்கட்சியான சுதந்திரக் கட்சியில் மைத்திரி இருக்கிறார். இரண்டு பெரிய சிங்கள கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவியுள்ளது. எனவே இலங்கையில் தற்போதைய நிலவரப்படி ரணில் கொண்டு வரும் தீர்மானத்தை எவரும் எதிர்கப்போவதும் இல்லை. மைத்திரி கொண்டு வரும் தீர்மானத்தை எவரும் எதிர்கப்போவதும் இல்லை !
இதனால் தமிழர் விடையத்தில் ஒரு நல்ல நிலை உருவாகியுள்ளது. இதனை ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்துகொள்ளவில்லை என்பது புதிராக உள்ளது. இந்த சகஜ நிலையை பாவித்து எவ்வளவு அதி உச்ச உரிமைகளை நாம் பெறமுடியுமோ அவற்றை பெற்றுவிடுவது நல்லது. இதனை தான் புத்தியுள்ள எவரும் சிந்திப்பார்கள். புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது இதில் இணைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தலைவர் இரா. சம்பந்தன், தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்க மாட்டார்கள் என்று அறிவித்து கெடுத்து கொண்டனர்.
ஆனால் யதார்த்தத்தில் இது அல்ல உண்மையான நிலை. அமைச்சரவையை விட அதிகாரம் மிக்க சபை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உருவாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் தேசிய விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தக் கூடிய சகல கட்சிகளின் தலைவர்களும் இதில் அங்கம் வகிக்கின்றார்கள். அரசாங்கத்தின் மிக முக்கிய விவகாரங்கள் இங்கு கலந்து ஆலோசிக்கப்பட்டே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. தன் பெயர் தேசிய நிறைவேற்று சபை. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் அங்கம் வகிக்கின்றார். எனவே அரசாங்கத்தில், அமைச்சரவையில் இல்லை என்று சொல்லி தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றவோ, தீர்வு முயற்சியில் இருந்து தப்பிக் கொள்ளவோ முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியூதீன், ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றனர். இனப் பிரச்சினைத் தீர்வுக்காக முன்பு உருவாக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இன்னொரு வடிவம் போலவும் நிறைவேற்று சபை அமைகின்றது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் சேரப் போவது இல்லை என்று சொல்லி அடம் பிடித்தது போல் அல்லாது நிறைவேற்றுக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து இருப்பது ஆரோக்கியமான விடயமாகும்.
ஆனால் இதன் மூலமான உச்ச நன்மைகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்பட தவறுகின்ற பட்சத்தில் இதுவும் தவற விடப்படுகின்ற வாய்ப்பாகவே வரலாற்றில் பதிவாகி விடும். காலம் காலமாக சுமந்து வந்திருக்கின்ற பாரம்பரிய அரசியல் நிலைப்பாடுகள் சிலவற்றில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிச் செல்வது போன்ற தோற்றப்பாடு பல விடயங்களில் இப்போது தெரிகின்றது. மாகாண சபை ஆட்சியில் ஈடுபாடு காட்டுகின்றனர். ஜனாதிபதியின் தேசிய நிறைவேற்று குழுவில் அங்கம் வகிக்கின்றனர். சுதந்திர தின வைபவத்தில் பங்கேற்று உள்ளனர். வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். இவை எல்லாவற்றையும் தமிழ் மக்களின் நன்மைகளை உத்தேசித்தே செய்கின்றனர் என்று கூறுகின்றார்கள்.
இது உண்மையாக இருக்குமானால் கிடைத்து இருக்கின்ற புதிய சந்தர்ப்பத்தை தவற விடாது வேகமாகவும், விவேகமாகவும் செயற்பட்டு தமிழர் பிரச்சினைக்கு அர்ப்பணிப்புடன் தீர்வு காண தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும். நாம் எல்லோரும் சீட்டாட்டம் குறித்து பொதுவாக அறிவோம். திறமையான சீட்டாட்ட வீரர்கள் அருமையான சீட்டுக்கள் கிடைக்கப் பெறாத போதும், அற்பமான சீட்டுக்களே கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்தியமாகவும், நுட்பமாகவும். ஈடுபாட்டுடனும் விளையாடி வெற்றியை தட்டிக் கொள்வார்கள். திறமை அற்ற வீரர்கள் அருமையான, அபூர்வமான சீட்டுக்கள் கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்திய குறைவு, அலட்சியம் ஆகியவற்றால் வெற்றியை கோட்டை விட்டு விடுவார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் சீட்டாட்டத்தில் இப்போதாவது சாதுரியமாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/2229.html
Geen opmerkingen:
Een reactie posten