தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 februari 2015

முல்லைத்தீவில் காணாமல்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

ஐ.தே.கவின் புதிய தவிசாளர் வருகை! திஸ்ஸ அத்தநாயக்க விரட்டியடிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 08:28.51 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளராக மீண்டும் மலிக் சமரவிக்ரம தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சியை விட்டு விரட்ட கட்சியின் நிர்வாக குழு தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் கூட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக இருந்த அமைச்சர் கபீர் ஹசீம் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து தவிசாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.
இதில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
திஸ்ஸ அத்தநாயக்க ஐ. தே.கட்சியில் நீக்கப்பட்டார்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சியில் இருந்து நீக்குவது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கூடிய அந்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் சமயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி அத்தநாயக்க, அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியதுடன் சுகாதார அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.
ரணில் – மைத்திரி இரகசிய உடன்பாடு என்ற பெயரில் போலி ஆவணத்தை தயார் செய்து அதனை பகிரங்கப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அத்தநாயக்க கைது செய்யப்பட்டு தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjq4.html


முல்லைத்தீவில் காணாமல்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 08:49.20 AM GMT ]
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயாரான புஸ்பாம்பாள் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ,வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன், மேரிகமலா குணசீலன், சிவமோகன் ,நாங்கள் அமைப்பைச் சேர்ந்த சஜீவன்,மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக அந்தோணி மார்க் மற்றும் சகாயம் ,முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக நவரட்ணம் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் சேர்ப்பிக்கும் பொருட்டும் வடமாகாண முதலமைச்சர் அவர்களுக்கான பிரதியையும் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன் மற்றும் மேரிகமலா குணசீலன் ஆகியோரிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கையளித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten