தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 februari 2015

மு.காங்கிரசை நம்ப வேண்டாம்! கூட்டமைப்பிற்கு பல தடவைகள் எச்சரித்துள்ளோம்: உலமா கட்சித்தலைவர்

ஜனாதிபதி மைத்திரி, சந்திரிக்கா, மஹிந்த ஆகியோரை இணைக்கும் வகையில் மேல் மாகாணசபையில் தீர்மானம்?
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 01:36.11 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரை அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுமாறு கோரும் வகையில் மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
மேல் மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களினால் இந்த தீர்மானம் நிறைவேற்பற்பட உள்ளது.
முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில், ஸ்வாஸ்திபுரவில் அமைந்துள்ள மேல் மாகாணசபை முதலமைச்சர் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் எழுத்து மூலமான கோரிக்கை ஜனாதிபதியிடமும் முன்னாள் ஜனாதிபதிகளிடமும் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தை அனுப்பி வைத்ததன் பின்னர் தனித்தனியாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்தக் கோரிக்கை கடிதத்தை தயாரிக்கும் பொறுப்பு முதலமைச்சர் பிரசன்னவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் இணைந்து செயற்பட வேண்டுமென மேல் மாகாணசபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdis2.html

ஈரானின் கப்பல் தொடரணி கொழும்பில் நங்கூரம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 03:08.57 AM GMT ]
ஈரானின் 33வது கடற்படை கப்பல் தொடரணி கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் தமது பிரசன்னத்தை விஸ்தரிக்கும் நோக்கத்திலேயே இந்த கப்பல்தொடரணி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரணியில், பண்டார் அப்பாஸ் என்ற உதவுக்கப்பலும் நக்டி என்ற நாசகாரி கப்பலும் உள்ளடங்குகின்றன.
இந்த கப்பல் தொடரணி சுமார் 5000 கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டே இலங்கை வந்துள்ளன. இந்த தொடரணியில் 120 இராணுவ மற்றும் இராணுவமற்ற பிரிவுகள் உள்ளன.
அத்துடன், பல நவீன தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.
ஈரானின் கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக ஈரான் அண்மைக் காலங்களில் சர்வதேச கடல் பிரசன்னத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மு.காங்கிரசை நம்ப வேண்டாம்! கூட்டமைப்பிற்கு பல தடவைகள் எச்சரித்துள்ளோம்: உலமா கட்சித்தலைவர்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 03:20.28 AM GMT ]
கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெற்றதன் மூலம் மஹிந்தவை அரசியலில் இருந்து விரட்ட வேண்டும் என நினைத்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் முதுகில் அக்கட்சி குத்தியுள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யாமல் ஆட்சியை அப்படியே விட்டு வைத்திருப்பதன் காரணம் ஒருவேளை மஹிந்த வென்றால் கிழக்கு சபையை காட்டி மீண்டும் மஹிந்தவுடன் இணைவதற்காகவே என நாம் அன்று கூறியது இன்று நிஜமாகியுள்ளது.
மஹிந்த தோற்ற நிலையில் அவரின் கட்சிக்காரர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை முஸ்லிம்; காங்கிரஸ் தொடர்கிறது.
இதனால் முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு உதவும் என மலைபோல் நம்பியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று நடுத்தெருவில் நிற்பதற்கு காரணம் அக்கட்சியினரால் இன்னமும் மு.கா பற்றியும் அதன் பதவி வெறி பற்றியும் புரிந்து கொள்ளாமையுமேயாகும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழ் கூட்டமைப்புக்கும் பல துரோகங்களை செய்து வந்துள்ளது.
ஆனாலும் முஸ்லிம்கள் சம்பந்தமான விடயங்களில் தமிழ் கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரசுடன் பேசுவதையம் அக்கட்சியை தூக்கிப்பிடிப்பதையுமே கண்டு வந்துள்ளோம்.
இது பற்றி நாம் பல தடைவை தமிழ் கூட்டமைப்பை எச்சரித்துள்ளோம். ஒரு ஏமாற்றுக் கட்சிக்கு வாக்கு வங்கி இருப்பதற்காக மட்டும் அக்கட்சி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதையும் முஸ்லிம் சமூகத்தில் பலமாக அரசியல் செய்து வளர்ந்து கொண்டிருக்கும் ஏனைய கட்சிகளுடன் பேசி தமிழ் முஸ்லிம் நல்லுறவை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும் என நாம் பல தடவை தமிழ் கூட்டமைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் மு. காவை நம்புவதும் பின்னர் ஏமாறுவதும். ஏமாற்றி விட்டார்களே என முஸ்லிம்களை போன்று ஒப்பாரி வைப்பதையுமே கண்டு வருகிறோம்.
கிழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளமை முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி என்றும் சொல்லலாம்.
மஹிந்தவை விரட்ட புறப்பட்ட முஸ்லிம்களுக்கு போங்கடா முட்டாள்களா? நாங்கள் மத்தியில் மைத்திரிக்கு ஆதரவு, மாகாணத்தில் மஹிந்தவுக்கு ஆதரவு என்பது போல் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாத் தலைமையிலான மக்கள் காங்கிரசின் செயற்பாடுகள் உள்ளன.
இத்தகைய பதவிக்காக சோரம் போகும் முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம்களும் தமிழ் கூட்டமைப்பும் நம்புவது இன்னுமின்னும் சிறுபான்மை மக்கள் மத்தியில் விரிசலையே ஏற்படுத்தும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdity.html

Geen opmerkingen:

Een reactie posten