[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 04:16.49 PM GMT ]
எந்தவொரு அரசியல் கட்சியும் அரசாங்கம் அமைக்கும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாது.
எனவே பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க முடியும்.
நாட்டின் அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியும்ää ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டுமென அதுரலிய ரதன தேரர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhu7.html
யாழ் தீவகப்பகுதியில் மூடியுள்ள கிணறுகள் தொடர்பில் சந்தேகம்!- விஜயகலா மகேஸ்வரன்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 04:02.18 PM GMT ] [ பி.பி.சி ]
அந்தக் கிணறுகளில் அப்பிரதேசங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயப்பாடுகள் உள்ளன என்று மக்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவசரக் கடிதம் ஒன்றையும் தான் பொலிஸ் மாஅதிபருக்கும் எழுதியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் அந்தக் கிணறுகளை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும், யாழ் தீவகப் பகுதிகளில் இன்னும் அச்சத்துடன் வாழ்கின்ற மக்களின் அச்சத்தைப் போக்கி இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோரியிருக்கின்றார்.
அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருப்பதுடன், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்லவிருப்பதாகவும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிபிசியிடம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhu6.html
Geen opmerkingen:
Een reactie posten