தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமாம்! டக்ளஸ் கருத்து

மகிந்த பிரதமராக வேண்டும் என கூறவில்லை: கெஹெலிய விளக்கம்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 10:09.00 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படுவது தற்போதைய அரசியல் சூழலில் கட்சியை பாரியளவில் பலப்படுத்தும் என முன்னாள் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தான் பிரதமர் வேட்பாளரை பற்றி கருத்து கூறவில்லை,முன்னாள் ஜனாதிபதி சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படுவது கட்சிக்கு பாரிய பலமாகும்,
அது மாத்திரமல்லாது பிரதமர் வேட்பாளர் குறித்து கட்சி செயற்குழுவே தீர்மானிக்கவேண்டும் எனவும், தேர்தல் தினம் அறிவித்தவுடன் பிரதமர் வேட்பாளர் யாரென்று கட்சி அறிவிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் வேட்பாளர் குறித்து என்னால் கருத்துக்களை வெளியிடமுடியாது, அவ்வாறு வெளியிட்டாலும் என் கருத்துக்கள் எடுபடவும் மாட்டாது என அவர் தெரிவித்ததோடு,
பிரதமர் வேட்பாளராக மகிந்தவை கட்சி அறிவித்தால் அதற்கு நான் கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டேன் எனவும் சுட்டிக்காட்டினார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr3D.html


ஈழத்தை வழங்கினால் மட்டுமே மகிந்த வெற்றிபெற முடியும்!– வெளிவிவகார அமைச்சர்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 10:09.20 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வடக்கு கிழக்கு மக்களுக்கு தான் வழங்கிய வாக்குரிமை காரணமாகவே அவர் தோல்வியடைந்தாக கூறியுள்ளதாகவும் அப்படியானால், ஈழம் வழங்கப்பட்ட நாட்டில் மாத்திரமே மகிந்த வெற்றி பெற முடியும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி வடக்கு, கிழக்கு மக்களுக்கு தானே வாக்குரிமையை வழங்கியதாகவும் அதனை வழங்கியிருக்காவிட்டால், அவரே வெற்றி பெற்றி பெற்றிருப்பார் என தங்காலை கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த கருத்து முற்றிலும் ஈழவாத கருத்து என கண்டிப்பதாகவும் மங்கள குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின் நாட்டில் இனவாதத்திற்கும்> மதவாதத்திற்கும் இனி இடமில்லை என்பதற்கான பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சமிக்ஞையை முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும். எந்த அடிப்படைவாதத்திற்கும் நாம் மேலும் இடமளிக்க தேவையில்லை.
ஒழுக்கமான உலகம் அவற்றை புறந்தள்ளியுள்ளது. இன, மத வாதங்களால் பட்ட துன்பங்கள் போதும். இதனால், சிங்கள அடிப்படைவாதத்தை மாத்திரல்ல, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் நாம் புறக்கணிக்க வேண்டும் எனவும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr3E.html


சர்வதேச விசாரணை அவசியமில்லை மங்கள
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 10:30.02 AM GMT ]
சர்வதேச சமூகத்தின் இணக்கப்பாட்டுடன் உள்ளக பொறிமுறையின் ஊடாக யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்வோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரத்திற்கமைய உள்நாட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என 2009ம் ஆண்டு ஐ.நா பொது செயலாளர் இலங்கைக்கு வந்த போது முன்னாள் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்தார்.
எனினும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமையினாலேயே இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது.
எனினும் சர்வதேச விசாரணையொன்றுக்கான அவசியம் தற்போதில்லை என்பதே புதிய அரசாங்கத்தின் உறுதியான நம்பிக்கை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடப்படாததினால் யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க முடியாது எனவும், உள்ளக பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்தப்படும் எனவும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதை நிறைவேற்றுவதற்கு தேவையான பின்புலத்தை நாம் தற்போது தயார்படுத்தி வருகின்றோம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் முதற்கட்டமாகவே சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமர் நீதியரசர் நீக்கப்பட்டு சர்வதேசத்தாலும், தேசிய ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்படும் பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே தேசிய சுயாதீன விசாரணைகளை அனைத்துலக உதவிகளுடன் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை மாத்திரமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களையும் பெற்று தேசிய சுயாதீன உள்ளக விசாரணையை ஏற்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேசத்தை பகைத்து கொள்ளாமல் சர்வதேசத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி உள்ளக பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உலக நாடுகளில் எந்தவொரு நாட்டிலும் படையினர் நூறு வீதம் தவறு செய்யாதவர்களாக காணப்படமாட்டார்கள் எனினும் தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்று கொடுக்கப்படும்.
இனவாதத்தை தூண்டுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படாது தேசிய சுயாதீன உள்ளக விசாரணை பொறிமுறையை புதிய அரசாங்கம் பெற்று கொடுப்பதாக உறுதிப்படுத்துவதோடு வடமாகாண சபையும், அம்மக்களும், அரசியல் தலைவர்களும் நம்பிக்கைகொள்ளவேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr3F.html


முதலமைச்சர்கள் 4 பேர் பொதுத்தேர்தலில்...
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 10:53.29 AM GMT ]
எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு மாகாண சபை உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கலந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது.
 
 
கிழக்கு மாகாண அமைச்சரவை நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 11:06.05 AM GMT ]
கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 6 அரசியல் கட்சிகளும் அமைச்சு பதவிகளை கோருவதால், அமைச்சரவையை நியமிப்பது மேலும் தாமதமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மாகாண சபைக்கு 4 அமைச்சர் பதவிகளே உள்ளன. இந்த நிலையில், அனைவரும் அமைச்சு பதவிகளை கோருவது தீர்க்க முடியாத பிரச்சினை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மாகாண சபையில் தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்ததுடன் நிர்வாகத்திலும் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன அங்கம் வகித்து வருகின்றன.
எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அடுத்த சில தினங்களில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி இணக்கப்பாட்டுக்கு வர எண்ணியுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr3J.html


தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமாம்! டக்ளஸ் கருத்து
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 11:30.02 AM GMT ]
தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடாத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதே தமது நிலைப்பாடென முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை பின்போடுவது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற சகல அரசியல் படுகொலைகளும் விசாரணை செய்யப்பட வேண்டும்.
அந்தவகையில் தவறுகள் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதுடன் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.
முன்னாள் அமைச்சர்களான தியாகராசா மகேஸ்வரன், ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே, லக்ஸ்மன் கதிர்காமர், பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பாறை சந்திரநேரு, திருமலை தங்கத்துரை, நீலன் திருச்செல்வம், தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல.எப் உறுப்பினரும், இலங்கை சமாதான செயலகத்தின் உத்தியோகத்தருமான லோகநாதன் கேதீஸ்வரன், பத்திரிகையாளர்களான அற்புதராஜா நடராஜா, பா.உ, பாலநடராஜா ஐயர், தராகி சிவராம், நிமல்ராஜன், ஈ.பி.ஆர்.எல்.எப், நாபா அணியின் தலைவர் சுபத்திரன், மனித உரிமைகள் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்ட ஏனையோரது கொலைகள் தொடர்பிலும் பாரபட்சமின்றிய விசாரணைகள் நடாத்தப்படல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr4C.html

Geen opmerkingen:

Een reactie posten