தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 februari 2015

வீரவன்ச மனைவி குறித்த இரகசிய பொலிஸாரின் விசாரணைகள் முடிவு

மட்டு. செயலகத்தில் பிரதம உள்ளகக் கணக்காய்வாளரின் வீடு தாக்கப்பட்டமைக்குக் கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 12:42.49 PM GMT ]
இலங்கை கணக்காளர் சேவையை சேர்ந்த, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக கடமையாற்றும் ரி.தேவகாந்தனுடைய வீட்டினுள் இனந்தெரியாதோர் புகுந்து தாக்குதல் நடத்தியமைக்கு மாவட்ட அரச கணக்காளர் சேவைச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரச கணக்காளர் சேவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேற்று முன்தினம் மாலை 06.30 மணியளவில் கணக்காய்வாளரை தேடிச்சென்ற இனந்தெரியாத குழுவினரால்,  அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான அநாகரீகமான சம்பவத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட அரச கணக்காளர் சேவைச் சங்கம் தனது வன்மையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்வதோடு, இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கொதிராக சட்ட நடவடிக்கையை மிக விரைவாக முன்னெடுக்குமாறு உரிய தரப்பினரை கேட்டுக்கொள்கின்றது.
குறித்த இனந்தெரியாத நபர்களுக்கெதிரான நடவடிக்கைகள் தாமதமாகும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdixy.html

வீரவன்ச மனைவி குறித்த இரகசிய பொலிஸாரின் விசாரணைகள் முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 12:51.05 PM GMT ]
தனது கடவுச் சீட்டுக்கு பொய்யான தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிடம் மேற்கொண்ட இரகசிய பொலிஸாரின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சசியின் சாதாரண கடவுச் சீட்டில் பிறந்த வருடமாக 1967 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இராஜதந்திர கடவுச்சீட்டில் பிறந்த வருடமாக 1971 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்விரு கடவுச் சீட்டுக்களிலும் மாறுபட்ட பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdixz.html

Geen opmerkingen:

Een reactie posten