[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 02:41.17 PM GMT ]
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்ததால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் வீடமைப்பு சமுர்த்தி அமைச்சின் பிரதி அமைச்சருமான அமீர்அலி சியாப்டீன் பொதுஜன ஜக்கிய முன்னணி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொதுஜன ஜக்கிய முன்னணியின் பொதுச் செயளாளரான சுசில் பிரேமஜயந்தவினால் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவையடுத்து வாபஸ் பெறப்பட்டது.
2014ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம் திகதி பொதுஜன ஜக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேமஜயந்தவினால் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து பிரதி அமைச்சர் அமீர் அலி நீக்கப்பட்டதாக கடிதமூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து சுசில் பிரேமஜயந்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுச் செயளாளர், தேர்தல் ஆணையாளர், பாராளுமன்ற செயளாளர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில் மனுதாரராகிய அமீர்அலி சியாப்டீன் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்புரிமை அங்கத்தவரேயன்றி பொதுஜன ஜக்கிய முன்னணியின் அங்கத்தவரல்ல என மனுவில் குறிப்பிட்டதுடன், பொதுஜன ஜக்கிய முன்னணிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மனுவின் 6வது பிரதிவாதியான தேர்தல் ஆணையாளரினால் மனுதாரரான அமீர் அலி சியாப்டீன் பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி அறிவித்தல அறிவிக்கப்பட்டதையடுத்து ;மூலம் பொதுஜன ஜக்கிய முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் இரு கட்சிகளினதும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஏனைய விடயங்கள் தொடர்பில் பொதுஜன ஜக்கிய முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஜனாதிபதித் தேர்தலிpல் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமைப்பீடம் முடிவெடுத்ததையடுத்து எதிர் மனுதாரர்கள் மனுதாரராகிய அமீர் அலி சியாப்டீனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு மீதான விசாரணையில் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தனது வாதத்தை முன்வைத்த வேளையில்,
6ம் பிரதிவாதியான தேர்தல் ஆணையாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிடர் ஜெனரல் நெரின் புள்ளே தனது சமர்ப்பனத்தில்
2ம் எதிர் மனுதாரர்ரான ஜக்கிய முன்னணியின் பொதுச் செயளாளரான சுசில் பிரேமஜயந்த வீடமைப்பு சமுர்த்தி அமைச்சின் பிரதி அமைச்சருமான அமீர் அலி சியாப்டீனை பொதுஜன ஜக்கிய முன்னணி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதாக 2015ம் ஆண்டு மார்கழி மாதம் 26ஆம் திகதி தேர்தல் ஆணையாளருக்கு கடிதமூலம் அனுப்பப்பட்ட பதவி நீக்க அறிவித்தலை மீளப் பெற்றதாக நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியதுடன் அந்த அறிவித்தல் கடிதத்தின் பிரதியையும் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
இதனையடுத்து மனுதாரரின் சட்டத்தரணி மனுவை வாபஸ் பெற்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgr5.html
உள்ளக விசாரணை இலங்கையில் சாத்தியம் இல்லை: ஐ.நா ஆணையாளருக்கு சிவில் அமைப்பு கடிதம்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 03:05.38 PM GMT ]
சர்வதேச விசாரணையை முன்னெடுத்துக் செல்லுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை தொடர்பான விசாரணை என்ற தலைப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,
ஐ.நா மனித உரிமை ஆணையாளார் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கும் எதிர்வரும் மார்ச் மாத ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டதொடர் தொடர்பில் தங்களிற்கு தமிழ் சிவில் சமுக அமையம் சார்பில் இம்மடலை வரைகின்றோம்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் செயற்படுகின்ற 100க்கு மேற்பட்ட சிவில் சமுக செயற்பாட்டாளர்களின் வலையமைப்பாகிய தமிழ் சிவில் சமூக அமையமானது, இலங்கையில் நேர்மையான சமாதானத்திற்காகவும் நீதிக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமைப்பாகும்.
மனித உரிமை ஆணையாளார் அலுவலத்தினால் நடாத்தப்படும் இந்த விசாரணையில் எமது அமையத்தின் பங்களிப்பு தாங்கள் அறிந்ததே. அந்த வகையில் அவ்விசாரணையின் முடிவுகளை அறிந்து கொள்வதில் நாம் ஆர்வமாக உள்ளோம்.
இலங்கையில் அரசாங்கம் மாறியிருக்கின்ற போதிலும், இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2012, 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக செயற்பாட்டிற்கு வந்திருக்கும் சர்வதேச பொறிமுறையானது தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு தாமதமின்றி நகர்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்குடன் இம்மடலை வரைகிறோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனவரி 9 2015 அன்று பொறுப்பெற்றுக்கொண்ட புதிய அரசாங்கம், யுத்ததின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை விசாரிக்க உள்நாட்டுப்பொறிமுறை ஒன்றை உருவாக்கும் தனது எண்ணத்தை அண்மையில் வெளிப்படுத்தி இருக்கிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் வெளிவர இருக்கும் அறிக்கையை அல்லது அதன் தொடர்ச்சியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை பிற்போடும் நோக்குடனேயே, இந்த உள்நாட்டு விசாரணைபொறிமுறை என்ற கருத்துதிர்ப்பு வெளிவந்திருக்கின்றது என நாம் கருதுகிறோம்.
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை சர்வதேச தரத்துடன் உருவாக்க இருக்கிறோம் என்கிற தோற்றபாட்டை ஏற்படுத்துவதன் மூலம் நிரந்தரமாகவே, சர்வதேச பொறிமுறை ஒன்றிற்கான கோரிக்கையை செயலிழக்கச் செய்யலாம் என இந்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஆனால், இலங்கையில் உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளகப் பொறிமுறையும் தீர்க்கமான பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதற்கு உதவப் போவதில்லை என்பதற்கு 2 பிரதான காரணங்களினை நாம் முன் வைக்க விரும்புகிறோம்.
தற்போதய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட, இன்றைய அரசின் முக்கிய பங்காளிகள் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகள் இலங்கை அரசாங்கம் “தூய்மையான ஒரு யுத்ததையே" நடாத்தியது என வலியுறுத்தி வருபவர்கள்.
அத்தோடு தற்போதைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் பங்காளிகளான சில மிக முக்கிய பிரமுகர்கள், இறுதிப் போரில் நேரடியாக முக்கியமான பங்கு வகித்தவர்கள்.
முன்னைய அரசாங்கத்தில் எதிர்க்கட்சியில் இருந்து தற்போது அரசாஙகத்தில் அங்கம் வகிப்போர் பொறுப்பக் கூறல் விடயத்தை வெறுமனே ஒரு வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சனையாகப் பார்ப்பவர்கள். எனவே இவ்வரசாங்கத்திடமிருந்து பொறுப்புக் கூறலை எதிர்பார்க்க முடியாது.
தென்னிலங்கையில் உள்ள அனைத்து அரசியற்கட்சிகளும் சிங்கள பௌத்த தேசியவாத அரசியலுக்கான தங்களது கடப்பாட்டை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்ற நிலையிலும், அந்த சிங்கள பௌத்த தேசியவாத அரசியலை பாதுகாக்கும் பெருமைக்குரியவர்களாக இலங்கை இராணுவத்தை சிங்கள தேசியவாத அரசியல் போற்றுகின்ற நிலையிலும், இலங்கை இராணுவத்திற்கெதிரான நம்பத்தகுந்த உள்ளக விசாரணைப் பொறிமுறை இலங்கையில் ஒருபோதும் உருவாக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை.
மேற்கூறிய காரணங்களால், சிறில்ங்காவிற்கான உள்ளக விசாரணை சம்பந்தமான எந்தவொரு கோரிக்கையையும் மிகுந்த அவதானத்துடன் அணுகப்பட வேண்டும் எனத் தங்களை மிகுந்த வினயத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக இவ்விடயம் தொடர்பில் காத்திரமான முன்வைப்புக்கள் எவையுமற்ற நிலையில் கூடுதல் அவதானம் தேவையானது என நாம் கருதுகிறோம்.
வெறுமனே காலத்தை கடத்துவதற்கும் தமக்கான ஓர் அரசியல் வெளியை உருவாக்குவதற்குமான ஏற்பாடுகளே இந்தக்கோரிக்கையின் ஒரே ஒரு நோக்கமாகும்.
எங்களைப் பொறுத்தவரையில், இலங்கை அராங்கத்துக்கு மேலும் காலாவகாசத்தை வழங்குவதானது, நீதியை தாமதிக்கச் செய்துவிடுவது மட்டுமல்லாது, நிரந்தரமாகவே மறுதலிக்கவும் செய்துவிடும்.
இந்தப் பின்னணியில், இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவானது எவ்வாறு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்தது என்பதையும் அது யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த பாரதூரமான குற்றங்களை வேண்டுமென்றே உதாசீனம் செய்தது என்பதையும் சர்வதேச முன்னெடுப்புக்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தியது என்பதையும் நாம் ஞாபகப்படுத்துகிறோம்.
இன்னுமொரு கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவுக்கு நேரம் வழங்குவதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை.
எனவே, தங்கள் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையை வெளியிடுமாறும் அதன் வழி சர்வதேச செயன்முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு தங்கள் அலுவலகத்தை மரியாதையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
இவ்விசாரணை அறிக்கை மூலம் பாரதூரமான குற்றங்கள் இடம்பெற்றமை கண்டறியப்படுமிடத்து தக்க சர்வதேச குற்றவவியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஒழுங்குகளை ஆரம்பிக்குமாறு உரிய ஐநா அமைப்புகளையும் மற்றும் உறுப்பு நாடுகளையும் தங்கள் அலுவலகம் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgr7.html
Geen opmerkingen:
Een reactie posten