தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 augustus 2013

அமெரிக்க எதிர்ப்பை வெளிப்படுத்திய தலைவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது


சர்­வ­தேச அரங்கில் ஒரு­ கா­லத்தில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச­வுடன், இணைந்து அமெ­ரிக்க எதிர்ப்பை தீவி­ர­மாக வெளிப்­ப­டுத்­திய தலை­வர்­களின் எண்­ணிக்கை இப்­போது குறைந்து விட்­டது. 
கடை­சி­யாக இந்த அணியில் இருந்து வில­கி­யி­ருப்­பவர் ஈரானின் ஜனா­தி­ப­தி­யாக இருந்த, மஹ்மூட் அக­ம­டி­நிஜாட்.
அண்­மையில் ஈரானில் நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அவரால் போட்­டி­யிட முடி­ய­வில்லை.
காரணம், இரண்டு தட­வை­க­ளுக்கு மேல், ஜனாதி­பதி பத­விக்கு எவரும் போட்­டி­யிட முடி­யாது என்று ஈரா­னிய அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் கூறு­கி­றது.
இலங்­கை­யிலும் அத்­த­கைய சட்டம் ஒன்று இருந்­தது.
இரண்­டா­வது, தட­வை­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டதும் முதல் வேலை­யாக, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச, அர­சி­ய­ல­மைப்பில் 18வது திருத்­தத்தைக் கொண்டு வந்து அந்த விதியை நீக்­கி­விட்டார்.
இப்­போது அவரால், மூன்­றா­வது பத­விக்­ கா­லத்­துக்­கா­கவும் போட்­டி­யிட முடியும்.
ஆனால், சர்­வ­தேச அரங்கில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்சவின் நெருங்­கிய நண்­ப­ராக இருந்த மஹ்மூட் அக­ம­டி­நிஜாட் அவ்­வாறு செய்ய முடி­யாது போனதால் அவர் இப்­போது முன்னாள் ஜனாதிபதியாக்கப்பட்­டுள்ளார்.
இதை­ய­டுத்து, கடந்த 4ம் திகதி ஈரானின் புதிய ஜனாதிபதி யாக ஹசன் ரௌஹானி பொறுப்­பேற்றார்.
இந்த பத­வி­யேற்பு விழாவில், இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச உள்­ளிட்ட 11 நாடு­களின் தலை­வர்கள் கலந்து கொள்­வார்கள் என்று ஈரானின் உயர்­சபை பேச்­சாளர் அறி­வித்­தி­ருந்தார்.
ஆனால், ஈரானில் இருந்து அழைப்பு வந்­தி­ருந்தும், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச ஈரான் செல்­ல­வில்லை.
வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல்.பீரி­ஸையும், பெற்­றோ­லி­யத்­துறை அமைச்சர் அனுர பிரி­ய­தர்­சன யாப்­பா­வை­யுமே அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பங்­கேற்­காது போன­தற்கு, என்ன காரணம் என்று அதி­கா­ர­பூர்­வ­மாக தகவல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.
எனினும், தற்­போது, ஈரா­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் நிலவும் சுமு­க­மற்ற சூழலில், ஈரான் செல்­வது அமெ­ரிக்­காவின் கோபத்தைக் கிள­றி­விடும் என்று அவர் நினைத்­தி­ருக்­கலாம்.
ஈரானின் எண்­ணெயில் தான் இலங்கை பெரிதும் தங்­கி­யி­ருந்­தது.
அமெ­ரிக்­காவின் பொரு­ளா­தாரத் தடை­யினால், ஈரானின் எண்­ணெய்யை வாங்க முடி­யாமல் இலங்கை திண்­டா­டு­கி­றது.
இலங்­கைக்கு எண்ணெய் விற்­பதில் அமெ­ரிக்கா தடை­களை சற்று தளர்த்­தி­யி­ருந்­தாலும், டொல­ராக அதற்குப் பணம் செலுத்த முடி­யாத இழு­பறி நிலை உள்­ளதால், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்­கு­மதி பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
இத்­த­கைய நிலையில், ஈரானின் நட்பை மேலும் வலுப்­ப­டுத்த முனை­வதை புத்­தி­சா­லித்­த­ன­மான காரி­ய­மாக இலங்கை கரு­தாமல் விட்­டி­ருக்­கலாம்.
ஏனென்றால், அமெ­ரிக்­கா­வுக்குச் சவால் விட்டுப் பேசு­கின்ற மறை­மு­க­மாக குத்திப் பேசு­கின்ற தலை­வ­ராக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச மட்­டுமே இப்­போது இருக்­கிறார்.
முதல்­முறை நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­தி­யாக மஹிந்த ராஜ­பக்ச பத­வி­யேற்ற போது, ஈரானில் மஹ்மூட் அக­ம­டி­நிஜாட், லிபி­யாவில் முவம்மர் கடாபி, வெனி­சு­வே­லாவில் ஹியூகோ சாவேஸ், மியான்­மாரில் தான் ஸ்வே என்று அமெ­ரிக்­கா­வுக்கு சவால் விடும் தலை­மைகள் இருந்­தன.
வட­கொ­ரியா, கியூபா என்று பல நாடுகள் அமெ­ரிக்­கா­வுக்குச் சவா­லாக இருந்­தாலும், மஹிந்த ராஜ­பக் ஷ, மஹ்மூட் அக­ம­டி­நிஜாட், முவம்மர் கடாபி, ஹியூகோ சாவேஸ், தான் ஸ்வே போன்­ற­வர்கள் அமெரிக்­கா­வுடன் எப்­போதும் கடும் போக்­குடன் செயற்­பட்­டனர்.
கிடைக்கும் சந்­தர்ப்­பங்­களில் எல்லாம், அமெ­ரிக்­காவைப் போட்டுத் தாக்­கு­வது இவர்­களின் வழக்­க­மாக இருந்­தது.
விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் முடி­வுக்கு வந்த பின்னர், அமெ­ரிக்கா மனி­த­ உ­ரிமை விவ­கா­ரங்­களைக் கையில் எடுத்துக் கொள்ள, அதற்­கெ­தி­ராக கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்து, அமெரிக்­கா­வுக்கு எதி­ரான அணிக்குள் தானா­கவே போய் சிக்­கினார் மஹிந்த ராஜ­பக்ச.
இதனால், ஈரானின் மஹ்மூட் அக­ம­டி­நி­ஜாட்டும், லிபி­யாவின் முவம்மர் கடா­பியும், வெனி­சு­வே­லாவில் ஹியூகோ சாவேசும், மியான்­மாரில் தான் ஸ்வேயும் இவ­ருக்கு நெருக்­க­மான நண்­பர்­க­ளா­யினர்.
ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச, அமெ­ரிக்க எதிர்ப்பு நண்­பர்கள் குழா­முடன் இணைந்து கொண்­டதும், அவர்­க­ளுக்கு இலங்­கையில் செங்­கம்­பளம் விரித்­த­தையும், மேற்­கு­லகம் அரு­வ­ருப்­போடு தான் பார்த்­தது.
ஈரா­னிய ஜனாதிபதியாக இருந்த மஹ்மூட் அக­ம­டி­நிஜாட், கடந்த ஆண்டு அணி­சேரா நாடு­களின் தலை­வர்­களின் உச்சி மாநாட்டை வெற்­றி­க­ர­மாக நடத்­திய போது, மேற்­கு­லக நாடு­க­ளுக்கு எதி­ரான, மூன்றாம் உலக நாடு­களின் பல­மான சக்­தி­யாக, அணி­சேரா அமைப்பை உரு­வாக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.
அதை­ய­டுத்து, ஜியோ 20 மாநாட்­டுக்­காக சென்­றி­ருந்த போது, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்சவை சந்­தித்­தி­ருந்தார்.
அப்­போது அவர், அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரான, புதிய உலக ஒழுங்கு ஒன்றை உரு­வாக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தினார்.
அந்தக் கருத்தை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்சவே குறிப்­பிட்­ட­தாக ஈரா­னிய அரசு ஊட­கங்கள், மாட்­டியும் விட்­டன.
அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரான நாடு­களைக் கொண்டு, ஒரு மாற்று உலக ஒழுங்கை, உரு­வாக்க முயன்ற அணி, மஹ்மூட் அக­ம­டி­நி­ஜாட்டின் ஓய்­வுடன் வலு­வி­ழந்த புய­லாகி விட்­டது.
முன்­ன­தாக, லிபி­யாவில் அமெ­ரிக்கா தூண்­டி­விட்ட புரட்சி, கடா­பியை உயிர்ப்­ப­லி­யெ­டுக்க, இந்த நண்­பர்கள் குழாம் ஆடிப் போனது.
அதற்கு முன்­ன­தா­கவே, மியான்­மாரின் மீது அமெ­ரிக்கா பொரு­ளா­தா­ரத்­ த­டை­களை விதித்து, இரா­ணுவ ஆட்­சி­ய­ள­ரான ஜனாதிபதி தான் ஸ்வேயை கைக்குள் போடத் தொடங்­கி­யது.
ஒரு­கட்­டத்தில், அமெ­ரிக்கத் தடை­களை எதிர்­கொள்­வதை விட, அமெ­ரிக்­கா­வுடன் இணங்கிப் போவதே மேல் என்ற முடி­வுக்கு அவர் வந்தார்.
அமெ­ரிக்கா சொன்­ன­தை­யெல்லாம் தட்­டாமல் செய்யத் தொடங்க, மியான்­மாரில் மெல்ல மெல்ல ஜன­நா­யகக் காற்று பரவத் தொடங்­கி­யது.
ஆக, இப்­போது அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரான நண்­பர்கள் குழாமில், மியான்மார் ஜனாதிபதி தான் ஸ்வேயும் இல்லை.
அடுத்து, புற்­று­நோ­யுடன் போரா­டிய வெனி­சு­வேலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ், மர­ணத்தை அடைய, இந்த நண்­பர்கள் குழாம் சிறுத்துப் போனது.
ஈரானின் ஜனாதிபதியாக இருந்த, மஹ்மூட் அக­ம­டி­நி­ஜாட்டும், ஓய்வு பெற்­றதும் மஹிந்த ராஜ­பக்சவின் நண்­பர்கள் குழாம் முற்­றா­கவே கலைந்து, அவர் மட்டும் இப்­போது தனி­ய­னாக இருக்­கிறார்.
இப்­போது அவரோ, அல்­லது அவ­ரது அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­களோ அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக வாய்­தி­றப்­பதை பெரிதும் தவிர்த்துக் கொள்­கின்­றனர்.
வெலி­வே­ரிய தாக்­குதல், தொடர்­பாக அமெ­ரிக்கா கண்­ட­னத்தை வெளி­யிட்ட போதும், யாருமே அதற்கு எதி­ராக வாய்­தி­றக்­க­வில்லை.
நண்­பர்கள் குழாம் பல­மாக இருந்த முன்­னைய சூழலில் என்றால், ''எங்­களின் வேலையை நாங்கள் பார்க்­கிறோம், கருத்துச் சொல்ல நீங்கள் யார்'' என்ற தொனியில் கடும் பதி­லடி கொடுக்­கப்­பட்­டி­ருக்கும்.
இப்­போது அடங்கிப் போக வேண்­டிய சூழல் என்­பதால், அடக்கி வாசிக்­கப்­ப­டு­கி­றது.
எவ்­வா­றா­யினும், ஈரா­னிய ஜனாதிபதியாக இருந்த மஹ்மூட் அக­ம­டி­நி­ஜாட்டைப் போலவே, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்சவும், கொமன்வெல்த் மாநாட்டை, பிர­மாண்­ட­மாக நடத்திக் காட்ட ஆசைப்­ப­டு­கிறார்.
ஆனால், மஹ்மூட் அக­ம­டி­நி­ஜாட்டைப் போன்று அவர், மாற்று உலக ஒழுங்கு பற்றியோ, இன்னொரு அணி குறித்தோ இனிமேல் பேசுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
ஏனென்றால் அவ்வாறு ஒருங்கிணைவதற்கு அவருடன் யாருமே முன்வரப் போவதில்லை.
எனினும், தனக்கெதிரான அமெரிக்க நகர்வுகளை முறியடிப்பதற்காக, கொமன்வெல்த்தில் உள்ள நாடுகளையும், ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளையும் அவர் தன் கைக்குள் போட்டு வருகிறார்.
இது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை போன்ற சர்வதேச அமைப்புகளில் இலங்கை மீதான நடவடிக்கைகளை தடுப்பதற்காகவேயன்றி, அமெரிக்காவுக்கு எதிரான கூட்டணிக்காக அல்ல.
அத்தகைய கூட்டணி தனக்கெதிரான அமெரிக்காவின் சீற்றத்தை திருப்பி விடும் என்ற யதார்த்தத்தை அவர் ஓரளவுக்காவது விளங்கிக் கொண்டிருக்கிறார்.
ஹரிகரன்

Geen opmerkingen:

Een reactie posten