தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 februari 2015

தமிழர்களுக்கான பரிகார நீதியினை மையப்படுத்தி புலம்பெயர் நாடுகளெங்கும் சமகால அரசியற் பொதுக்கூட்டங்கள் தீவிரம்



கழிவு எண்ணெய் விவகாரம்: வட மாகாண சபையின் நிபுணர் குழுவால் விரிவான ஆய்வு முன்னெடுப்பு
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 05:45.22 PM GMT ]
சுன்னாகம், தெல்லிப்பளை பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக விரிவான விஞ்ஞான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாகப் பூரணமான ஆய்வு ஒன்றை நடாத்துவதற்கு வடக்கு மாகாண முதல்வரின் பணிப்பின் பேரில் நிபுணர் குழு ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்கள் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.
நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெய் மாசுக்கான சரியான மூலத்தை அடையாளம் காண்பது, நீரில் கலந்துள்ள மாசுக்களின் வகைகளையும் அளவுகளையும் கண்டறிவது, எண்ணெய் மேலும் பரவுவதைத் தடைசெய்வது, நீரைத் தூய்மைப்படுத்துவதற்கான பொருத்தமான வழிமுறைகளைப் பரிந்துரை செய்வது போன்றவற்றை ஆய்வின் இலக்குகளாகச் கொண்ட நிபுணர்குழு, ஆய்வின் முதற்கட்டமாகத் திட்டவரைவுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
அது முற்றுப்பெற்ற நிலையில் இன்று பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நீர்மாதிரிகளைச் சேகரிக்கும் முயற்;சியில் ஈடுபட்டுள்ளது.
ஆய்வில் துல்லியமான அளவீடுகளைப் பெறுவதற்கும் ஆய்வின் முடிவுகளைச் சட்டரீதியான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கும் இலங்கை அரசால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கு அமைவாக நிபுணர்குழு, கொழும்பில் அமைந்துள்ள கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் உதவிகளை நாடியிருந்தது.
இதையடுத்து ஆய்வு உபகரணங்கள் சகிதம் வருகைதந்திருந்த கைத்தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வாளர்களின் உதவியோடு இம்மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந் நீர் மாதிரியைச் சேகரிப்பதில் நிபுணர் குழுவோடு தரவுகளைப் பதிவு செய்யும் உதவியாளர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறை மாணவர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நீர்மாதிரிகள் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு பகுப்பாய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்குழு, யாழ்ப்பாணப் பல்கலைகழகத்திலும், தொண்டமானற்றில் அமைந்துள்ள வடமாகாண நீரியல் ஆய்வு மையத்திலும் இது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdir3.html


தமிழர்களுக்கான பரிகார நீதியினை மையப்படுத்தி புலம்பெயர் நாடுகளெங்கும் சமகால அரசியற் பொதுக்கூட்டங்கள் தீவிரம்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 06:22.55 PM GMT ]
அனைத்துலக விசாரணை விவகாரத்தில் சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் அனைத்துலக அரங்கில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், இது தொடர்பிலான விழிப்புக் கூட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
தலைநகர் பாரிசின் தொடர்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரிச்சிலும் லண்டனிலும் இடம்பெற்றிருந்த இப்பொதுக்கூட்டங்களில், பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இணையவழி காணொளிவாயிலாக இணைந்து கொண்டு கருத்துரையினை வழங்கியிருந்தார்.
1983ம் கறுப்பு யூலை இனக்கலவரம் தொடர்பில் எந்தக் கட்சி செய்திருந்தாலும், யார் செய்திருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்தி தண்டைனை வழங்கப்படும் என ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியினை சிறிலங்கா அரசு இன்றுவரை நிறைவேற்றவில்லை எனத் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், அதுபோன்றே மீண்டும் இன்று அனைத்துலக சமூகத்தினை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் அவிழ்த்துவிட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
இரு நிகழ்வுகளிலும் பங்கெடுத்திருந்த ஊடகர்கள், அரசியல் ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான கேள்விகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பதில் அளித்திருந்தார்.
சுவிஸ்:
"சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும் தமிழினப்படுகொலைக்கான பரிகாரநீதி கோரலும்" எனும் தலைப்பில் சூரிச்சின் வொல்க்கவுஸ் மண்டபத்தில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்தது.
நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும் அதன்பின்னுள்ள நுண்ணரசியல் தொடர்பில் கருத்துரையினை வழங்கியிருக்க, சூரிச் பிராந்திய அரசவை பிரதிநிதிகள் செ.ஜெயம், சா.ஜெயசீலன் உட்பட மற்றும் அமைச்சரவை செயலர் மு.சுகிந்தன் ஆகியோரும் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.
சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்தின் ஒரு தரப்பாக உள்ள சர்வதேச தரப்புடனான தமிழர் தரப்பின் நிலைபாடுகள் எத்தகைய போக்கில் அமையப் போகின்றது பற்றிய தனது கரிசனையினை கருத்துப்பரிமாற்றத்தின் போது ஊடகவியலாளர் சண் தவராஜா அவர்கள் முன்வைத்திருந்தார்.
நிறைவில் எதிர்வரும் மார்ச்16ம் நாள் ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் இடம்பெற இருக்கின்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு கோரியிருந்ததோடு, இதற்கான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளால் கூறப்பட்டிருந்தது.
பிரித்தானியா:
"ஐ.நா மனித உரிமைமச்சபையும் தமிழர்களுக்கான பரிகாரநீதி கோரலும்" எனும் தலைப்பில் இடம்பெற்றிருந்த இப்பொதுக்கூட்டத்தினை பிரதமர் பணிமனையின் பிரித்தானிய இயக்குனர் வசந்தன் அவர்கள் நிகழ்வரங்கினை தொடங்கிவைக்க, துணை அரசவைத் தலைவர் தில்லை நடராஜா அவர்கள் கூட்டத்தினை நடத்தியிருந்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 10 பாரிய செயற்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் பணினையின் தலைமைச் செயலர் பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா அவர்கள் விளக்கமளித்திருந்தார்.
பொதுசன தளத்தில் அனைத்துலக விசாரணையினை வலுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற பரப்புரை பயணம் குறித்து அரசவை உறுப்பினர் அகிலன் அவர்களது கருத்துரையோடு, அரசவை உறுப்பினர் கோபிநாத் அவர்களுடைய எழுச்சியுரையும் இடம்பெற்றிருந்தது.
எதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெற இருக்கின்ற தேர்தலில் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தும் Tamils 4 Democracy - UK எனும் செயல்முனைப்பு குறித்து பொதுசன விவகாரங்கள் அமைச்சின் பிரித்தானியச் செயலர் ருத்திராபதி சேகர் அவர்கள் விளக்கியிருந்தார்.
சாரங்கி தமிழ்பாடசாலை மாணவர்கள் வரவேற்ப்பு வணக்க நடத்தினையும் கவிதையினையும் வழங்கியிருக்க, வட தமிழீழத்தின் சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையக்கழிவினால் குடாநாட்டில் ஏற்பட்டு நீர் அசுத்தமாகும் விவகாரம் குறித்தும் கருத்துப் பரிமாறப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdir5.html

Geen opmerkingen:

Een reactie posten