சற்று முன்னர் வைகோ அவர்கள் கைதானார் !
ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் படுகொலை, கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து, தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக திருச்சியில் கருப்புக் கொடி போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் உட்பட 1000 பேர் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது.
தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக்கொடி காட்டினார் என்ற குற்றத்திற்காகவே தமிழக்ப் பொலிசார் வைகோ அவர்களை கைதுசெய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten