தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 augustus 2013

இலங்கையில் முச்சக்கரவண்டிகள் தொடர்பில் புதிய சட்டம் அமுலாக்க தீர்மானம்


இலங்கையில், முச்சக்கரவண்டிகள் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முச்சக்கரவண்டிகளை மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மாத்திரமே செலுத்த முடியும் என புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனம் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர முச்சக்கரவண்டிகளை செலுத்தும்போது பின்பற்ற வேண்டிய பல்வேறு விதிமுறைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கமைய வலது புறமாக முச்சக்கரவண்டிக்குள் பிரவேசிக்கவோ அதிலிருந்து இறங்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டில் பயணிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை முச்சக்கர வண்டியில் பின்புறம் இடது பக்கத்தில் மிகவும் தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வயதிற்கு குறைவான இரண்டு சிறுவர்களை ஒரு பயணி என்ற அடிப்படையில் பயணிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டிக்குள் நேர் எதிரே ஆசனங்களை பொருத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
சாரதியை தவிர்ந்த வேறு நபர்கள் சரதிக்கான ஆசனத்தில் அமர்ந்து செல்வதற்கு முச்சக்கரவண்டிக்குள் இருந்தவாறு கையேடுகளை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனையவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிக் கருவிகள் அல்லது வேறு உபகரணங்களை முச்சக்கரவண்டியில் பயன்படுத்தக் கூடாது என விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனைத்து பயணிகளும் சாரதி வினவும் பட்சத்தில் செல்வதற்கு உத்தேசித்துள்ள பயணம் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டுமெனவும் மானியில் குறிப்பிடப்படுகின்ற மொத்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டுமெனவும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகளுக்காக முச்சக்கரவண்டியை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்லும் அனைத்து முச்சக்கரவண்டிகளிலும் மானிகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten