இலங்கையில் போர் 2009ம் ஆண்டு முடிவுற்ற பின்னர், புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை கோட்டபாய தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது யாவரும் அறிந்த விடையம். இன் நிலையில் இலங்கை அரசானது புலிகளிடம் இருந்து கைப்பற்றிய அதி நவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இலங்கையிடம் இருந்து தமது நாடு ஆயுதங்களை கொள்வனவு செய்தது என்பதனை, இந்தியப் பாதுகாப்பு அமைச்சரே ஒப்புகொண்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தங்கம் மற்றும் தங்க நகைகளையும் கோட்டபாய இவ்வாறு விற்பனை செய்துவிட்டாரா என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது.
சமீபத்தில் கூட இந்திய தூதுக்குழுவினர் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகப் பேச இலங்கை சென்றார்கள். இவர்கள் எல்லாரும் ஆத்மார்த்தமாக ஒரு அரசியல் தீர்வு ஒன்று காணாவா அங்கே சென்றார்கள் ? இல்லை என்றால் பேரம் பேசத்தான் சென்றார்களா என்று தெரியவில்லை. தமிழ் நாட்டு மக்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள் எவ்வளவு போராட்டங்களை நடத்தினாலும் அவர்களை துட்சமாக மதித்து , தமது போக்கில் தான் இன்னும் இந்திய மத்திய சர்கார் செல்கிறது.
Geen opmerkingen:
Een reactie posten