தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 augustus 2013

ஐ.நா. 99ம் பிரிவின் கீழ் அனைத்துலக விசாரணை: சமந்தா பவரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் 99ம் விதியின் கீழ் ஐ.நா செயலாளர் நாயகம் தனது உட்கிடையான அதிகாரங்களை பயன்படுத்தி முள்ளிவாய்கால் இனப்படுகொலை தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்றை கொண்டுவர அமெரிக்க அரசு தனது தார்மீக, இராஜதந்திர வளங்களை பயன்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள்,
ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்த பவரிடம் அவர்களின் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.
ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்த பவரிடம் அவர்களுக்கு இவ்விவகாரம் தொடர்பில் எழுத்தியுள்ள கடித்திலேயே இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடுமையான இன அழிப்புகளில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு ஒன்றென்றும், இவ் இனஅழிப்பு அமெரிக்க அரசுத் தலைவர் ஒபமாவின் காலத்திலேயே இடம் பெற்றதெனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையிலும், ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விமர்சன அறிக்கையிலும், அமெரிக்க சர்வதேச சட்ட சஞ்சிகையில் பிரசுரமான பேராசிரியர் ஸ்டீவன் ரட்ணரின் ஆய்வுக் கட்டுரையிலும் நீதி வழங்குவதற்காக அரசியல் சூழலும், நீதிபரிபாலன சூழலும் சிறிலங்காவின் உள்ளே இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளமை ஆகிய விடயங்கள் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே அனைத்துலக விசாரணை ஒன்றின் மூலமே நீதி வழங்கலாம் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பில் அரசியல் நலன்கள் prevalent ஆக இருப்பதால் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை ஐக்கிய நாடுகள் பட்டத்தின் 99வது விதியின் கீழ் அமைக்கலாம், அமைக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளதுடன், இக்கருத்துடன் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் சட்ட ஆலோசகர்கள், அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பம், அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு ஆகியனவும் ஒருமித்துள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தண்டனையினை (Impunity) சகித்துக் கொள்வது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும். மேலும் தேசிய இனப் பிரச்சனைகள் தொடர்பாக பிற நாடுகளுக்கும் “சிறிலங்காக் தீர்வு” என்னும் தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். அது அனைத்துலக பாதுகாப்பிற்கும் சமாதானத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்பது சொல்லத் தேவையில்லை என அக்கடித்தில் குறிக்கப்பட்டுள்ளதோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஐ.நாவுக்கான சமந்தா பவர் அவர்களின் நியமனம் அமெரிக்கவின் செனட் சபையினால் அங்கிகாரப்பட்டமைக்கு வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ம் நூற்றாண்டில் அனைத்துலக குடிசார் சமுகம், அனைத்துலக உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உலகமயமாக்கலும் தொழில்நுட்ப புதுமைகளும் (Technological innovation) மக்கள்சக்தியின் மேலிருந்த தடையினை (மூடியை) நீக்கிவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய செயலாளர் நாயகத்தின் மேல் தார்மீக அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து குடிசார் சமுகத்தை ஒருங்கிணைத்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் பட்டத்தின் 99ம் பிரிவின் கீழ் விசாரணை பொறிமுறையை அமைக்க கோரி, 1000 அரசுசார்பற்ற நிறுவனங்களின் ஆதரவினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திரட்டி வருகின்றமையும் தூதுவர் சமந்தா பவரின் கவனத்திற்கு கொண்டுவரப் பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten