தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

யாழில் சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்கள் கைது

[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 01:40.57 PM GMT ]
யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்கள் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர். குறித்த இளைஞர்களிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten