தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

தமிழர் தரப்பை ஏமாற்­றுமா ஜெனீவா?

கோத்தபாயவுக்கு எதிராக ரத்துபஸ்வெல மக்கள் ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 10:49.53 AM GMT ]
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக ரத்துபஸ்வெல மக்கள் இன்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில் உயிர்களைப் பலிகொடுத்தும் நியாயமான தீர்வைப் பெற முடியாமல் போனதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சியனப் பிரதேச குடி நீர் பாதுகாப்பு மக்கள் எழுச்சி அமைப்பின் ஏற்பாட்டாளர் பிரமித ஹெட்டியாராச்சி இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அந்த நேரத்தில் கடமையில் இருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர், அப்பொழுது கடமையில் இருந்த இராணுவத் தளபதி அல்லது பதில் இராணுவத் தளபதி ஆகியோரை உடன் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து எமது மக்கள் திருப்திப்படப் போவதில்லை.
இது தொடர்பிலான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் நாம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளோம்.
எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்துக்கு வலியுறுத்தியே இன்று மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
குடிநீர் கேட்டு வீதியில் இறங்கிப் போராடிய மக்கள் மீது மகிந்த அரசாங்கம் துப்பாக்கியால் பதில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச சேவை உள்ளீர்ப்பில் புறக்கணிக்கப்படும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 11:06.26 AM GMT ]
அரச சேவை ஆட்சேர்ப்புக்களின் போது அம்பாறை மாவட்டத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் யோ.கோபிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பா அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்மையில் கிழக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகவுள்ள சமூக சேவை உத்தியோகத்தர் தரம்-II இற்கு மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக திறந்த அல்லது மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தகைமையுடைய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இவ்விண்ணப்பம் கோரலில் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் விண்ணப்பிக்க முடியாது எனவும் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக காட்டப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன?
அம்பாறை மாவட்டமானது சுமார் தொண்ணூறாயிரம் தமிழ் வாக்காளர்களைக் கொண்டுள்ளதுடன் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொண்டதொரு மாவட்டமாகும்.
இம்மாவட்டத்தில் இவ்வாறான அரச தொழில்கள் வழங்கும்போது ஏன் இவ்வாறான பாகுபாடு காட்டப்படவேண்டும்?
கடந்த காலங்களில் கூட முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் சிற்றூழியர்கள் நியமனங்கள் என்பனவும் எழுத்துப் பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்டும் தமிழர்கள் என்றபடியால் நியமனங்கள் மறுக்கப்பட்டு சகோதர இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டது. 
அவ்வாறு மறுக்கப்பட்ட பின்னர் இம்முறை பகிரங்கமாகவே இவ்வாறு ஒரு இனம் தாம் விரும்பிய ஒரு தொழிலினை செய்யாமல் தடுப்பதென்பது மிகவும் பாரியதொரு அப்பட்டமான மனித உரிமையை மீறும் செயலாகும்.
தமிழினமானது கடந்தகால யுத்தத்தின் பின்னர் தம்மிடமுள்ள கல்வியினை மாத்திரம் மூலதனமாக வைத்து தமது முன்னேற்றத்தினை ஏற்படுத்த நினைக்கும் காலத்தில் இவ்வாறு அதனையும் திட்டமிட்டு ஒருமாவட்டத்தினுள் புறக்கணிப்பது நியாயமானதா?
சகோதர இனங்கள் வியாபாரத்தில் முன்னேறும் அதே தறுவாயில் சிறியளவிலான கல்வியினை மாத்திரம் வைத்துக்கொண்டு பலத்த அரசியல் பின்ணணியில் இவ்வாறாக மாகாண சபையின் அதிகாரத்தினைப் பயன்படுத்தி அவர்கள் மாத்திரமே அரச தொழில் பெறவேண்டுமென்று செயற்படுதலானது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமே.
ஏனெனில் போட்டிப் பரீட்சையில் சிறந்த மதிப்பெண்ணை பெறும் ஒரு பரீட்சார்த்தியினை தேர்ந்தெடுப்பின் அப்பரீட்சையில் தமிழர்கள் முதன்நிலையில் இருப்பதால் இவர்களின் இயலாமை வெளிப்படும் என்னதனை நன்கு உணர்ந்தே இவ்வாறான தந்திரங்களை பாவித்து தமிழர்களை புறக்கணிக்கின்ற செயற்பாட்டினை முன்னெடுக்கின்றனர்.
இதனைப் போன்று பல அபிவிருத்தித் திட்டங்களிலும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையும், திட்டமிட்டு சகோதர அரசியல் தலமைகளால் தமிழர்களின் காணிகள் பறிக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருவதனையும் பிரதேசத்தின் அபிவிருத்திகளை நிர்வாகச் செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டிய பிரதேச செயலகங்களுக்கு வழங்கி நிதிகளை வீணடித்த நிகழ்வுகளையுமே இதுவரையில் நடந்தேறிய நிதர்சனமான உண்மையாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னைய உள்ளூராட்சி அமைச்சரின் மிகத்திட்டமிட்ட ரீதியில் அம்பாரைமாவட்ட தமிழ் பிரதேச சபைகளின் செயற்பாட்டை முடக்குவதற்காக அவற்றிற்கு தேவைகளாக இருந்த பல வாகனங்களினை வழங்காமல் தேவைக்கு அதிகமாக உள்ள மற்றைய சபைகளுக்கே வழங்கியமையானது எம் தமிழ் மக்கள் மீது எவ்வளவு பாகுபாட்டிடை காட்டும் செயற்பாடு என்பதனை எம்மக்கள் நன்கு அறிவர்.
இவ்வாறாக தொடர்ந்தும் தமிழர்கள் நசுக்கப்படுவதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. இச்செயற்பாடுகளை உடன்நிறுத்தி மாவட்டத்தினுள் பாகுபாட்டினை ஏற்படுத்தும் இச்செயற்றிட்டமானது புதிய ஜனாதிபதியின் தலையீட்டாலும் புதிய கிழக்குமாகாண ஆளுனராலும் ஏனைய அரசியல் தலமைகளினாலும் உடன் நிறுத்தப்பட்டு கடந்த கால ஆட்சியில் இவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்க சிறந்ததொரு சமிக்கையினை காட்டவேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானல் எதிர்காலத்திலும் மீண'டுமோர் ஓர் ஆயுதக் கலாச்சாரம் தோன்றக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதனையும் கருத்தில் கொண்டு செயற்பட அனைத்து தலமைகளும் முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciw6.html
வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு சிறைத் தண்டனை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 11:56.07 AM GMT ]
வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் ரஷிக அமரசிங்கவிற்கு நுவரெலிய நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றிலேயே அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் திகதி ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அனுமதியின்றி நுழைந்தமை மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை இந்த வழக்கு விசாரணைகளில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆஜராகாமையால் அவர் இன்றி வழக்கு விசாரணைகள் முடிவுற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவரை விரைந்து கைது செய்யுமாறும் பிடியாணை பிறப்பித்த நீதவான் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு நீதிமன்றத்தை புறக்கணிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குற்றவாளியான வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரசிக அமரசிங்க ஜனவரி 19ம் திகதி விடுமுறையில் சிங்கப்பூர் சென்றிருக்கும் நிலையில் அவருக்கு இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciw7.html

மகேஸ்வரி நிதியத்திற்குப் பதிலான மண் அகழ மாற்று நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 02:17.28 PM GMT ]
யாழ்.வடமராட்சி கிழக்கில் ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியத்தினால் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டுவந்த மணல் அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் குறித்த மணல் அகழ்வு நடவடிக்கையினை பிரதேச மக்களே கையாளும் வகையிலான பொறிமுறை ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி மகேஸ்வரி நிதியத்தினர் மணல் அகழ்விற்குப் பயன்படுத்திய அனுமதிப்பத்திரம் முறையற்ற வகையில் பெறப்பட்டதென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிதியம் மணல் அகழ்வதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் குடாநாட்டில் பெருமளவு கட்டட வேலைகள் பின்னடைவு கண்டுள்ளதுடன், 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டட நிர்மாண தொழிலாளர்கள் மற்றும் மணல் அகழந்தெடுக்கும் தொழிலாளர்கள், பாராவூர்தி தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அவர்,
ஐ.தே.கட் சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்,  துவாரகேஸ்வரனுக்கு குறித்த விடயம் தொடர்பிலான ஆய்வினை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.
இதற்கமைய அவர் இன்றைய தினம் குறித்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது வடமாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி 2 மாதங்களுக்கு மணல் அகழ்வினை,  மருதங்கேணி கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக நடத்துவதற்கு மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2 மாதங்களின் பின்னர் நாகர்கோவில், அம்பன், குடாரப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து மணல் அகழ்வு தொடர்பில் அரசியல் தலையீடுகள் இல்லமல் தாங்களே மேற்கொள்ளும், பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் தான் பிரதமருக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் அதனடிப்படையில் விரைவுபடுத்தி இந்த மணல் அகழ்வு விடயத்தில் ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் தரப்பை ஏமாற்­றுமா ஜெனீவா?
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 02:42.21 PM GMT ]
ஜெனீ­வாவில் இருந்து மேற்­கொள்­ளப்­படும், இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் போர்க்­குற்ற விசா­ர­ணைகள் இறு­திக்­கட்­டத்தை எட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன.
அடுத்த மாத இறு­திக்­குள்­ளாக இந்த விசா­ரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்டு விடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
அவ்­வாறு சமர்ப்­பிக்­கப்­பட்டால் தான், அடுத்த கட்­ட­மாக மார்ச் 25ம் திகதி அதனை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்தில் சமர்ப்­பிக்க முடியும்.
இலங்­கையில் நடந்­தே­றி­யுள்ள ஆட்சி மாற்றங்கள் குறித்த கவ­லைகள் ஏது­மின்றி, இதற்­கான பணிகள் வேக­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவே தெரி­ய­வ­ரு­கி­றது.
அதே­வேளை, இந்த விசா­ரணை அறிக்­கையும், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை யின் அடுத்த கூட்­டத் ­தொ­டரும் இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­துக்கு சவால்கள் மிக்க விட­ய­மா­கவே இருக்கப் போகின்­றன.
ஏனென்றால், முன்­னைய மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் ஜெனீவா தீர்­மா­னங்கள் மற்றும் ஐ.நா. விசா­ரணை போன்ற விட­யங்­களில், கடைப்­பி­டித்த முரண்­போக்கு அணு­கு­மு­றையை இப்­போ­தைய அர­சாங்­கத்­தினால் கடைப்­பி­டிக்க முடி­யாது.
அதே­வேளை, முன்­னைய அர­சாங்கம் அத்­த­கைய அணு­கு­மு­றையின் மூலம் சிங்­கள மக்கள் மத்­தியில் தனது இமேஜை உயர்த்திக் கொண்­டது.
எனவே, முன்­னைய அர­சாங்­கத்­துக்கு பலம் சேர்க்கும் வகையில், தமது நகர்வு அமைந்துவிடக்கூடாது என்­ப­துவும், இப்­போ­தைய அர­சாங்­கத்தின் கரி­ச­னைக்­கு­ரிய விவ­கா­ர­மா­கவும் இருக்­கி­றது.
இன்னும் சில மாதங்­களில் பாரா­ளு­மன்றத் தேர்­தலை எதிர்­கொள்ளப் போகின்ற நிலையில், தற்­போ­தைய அர­சாங்கம் சிங்கள மக்­களை விரோ­திக்கும் எந்தக்காரியத்­திலும் ஈடு­ப­டாது.
எனவே, ஜெனீவா கூட்­டத்­தொடர் விவ­கா­ரத்தில், விட்­டுக்­கொ­டுக்­கவும் முடி­யாத அதே­வேளை, சர்­வ­தே­சத்­துடன் முரண்டு பிடிக்­கவும் முடி­யாத ஒரு சூழ்­நிலை புதிய அர­சாங்­கத்­துக்கு உரு­வா­கி­யுள்­ளது.
மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் 100 நாள் செயற்­றிட்­டத்தை முன்­வைத்தே தற்­போது ஆட்­சியை நடத்­தி­னாலும், அவ்­வப்­போது அதற்கு வெளியே செல்ல வேண்­டிய நிலையும் உள்­ளது.
ஜெனீவா விவ­கா­ரமும் அவ்­வா­றா­ன­தொன்று தான். ஏனென்றால், அந்த 100 நாட்­க­ளுக்குள் தான் ஜெனீவாவில் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. விவாதம் நடக்கப் போகி­றது. அடுத்து என்ன செய்­வது என்று தீர்­மா­னிக்­கப்­படப் போகி­றது.
எனவே, புதிய அர­சாங்கம் ஜெனீவாவை எவ்­வாறு அணு­கு­வது-, ஐ.நா. விசா­ர­ணையை எப்­படிக் கையாள்­வது என்­ப­தற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் எப்­ப­டியும் ஈடு­பட்­டே­யாக வேண்­டிய கட்­டாயம் உள்­ளது.
ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம் சமர்ப்­பிக்கப் போகும் விசா­ரணை அறிக்கை, குற்­றங்கள் நடந்­ததா இல்­லையா என்­பதைத் தான் கூறுமே தவிர, அது எவ­ரையும் குற்­ற­வியல் நீதி­மன்­றத்­து க்கு கொண்டு செல்­வ­தற்­கான அதி­காரம் பெற்­ற­தாக இருக்­காது என்றும், அந்த அறிக்கை வெளி­யா­னதும் அது­கு­றித்து அர­சாங்கம் முடிவு செய்யும் என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருக்­கிறார்.
எவ்­வா­றா­யினும், குற்­றங்கள் நிக­ழ­வில்லை என்று ஐ.நா. விசா­ரணை அறிக்கை வரப் போவ­தில்லை. எனவே, அடுத்த கட்டம் குறித்து தீர்­மா­னிக்க வேண்டிய நிலையில் அர­சாங்கம் இருக்­கி­றது.
அதனால்தான், கடந்­த­வாரம் புது­டில்லி சென்­றி­ருந்தபோது, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இந்­தி­யாவின் உதவியை கோரி­யி­ருந்தார்.
அது­பற்­றிய தக­வல்­களை இரு நாடு­களும் பகி­ரங்­கப்­ப­டுத்­தாத போதிலும், இந்­ திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜுடன் நடந்த மூன்று மணி­நேரப் பேச்சில் அதுவும் முக்­கி­ய­மாக ஆரா­யப்­பட்­டி­ருக்­கி­றது.
புது­டில்லிப் பய­ணத்தின் முடிவில் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்த மங்­கள சம­ர­வீர, ஐ.நா.வின் உத­வி­யுடன் இலங்கை அர­சாங்கம் உள்­நாட்டு விசா­ரணை ஒன்றை நடத் தும் என்று தெரி­வித்­தி­ருந்தார்.
ஏற்­க­னவே, தேர்தல் பிர­சா­ரங்­களின் போதும் கூட, சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அனு­ம­திக்க மாட்டோம் என்றும், ஆனால் உள்­நாட்டுச் சட்­டங்­க­ளுக்கு அமைய, உள்­நாட்டு விசா­ரணை நடத்­துவோம் என்றும் தான் தற்­போ­தைய அர­சாங்கம் கூறி­யி­ருந்­தது.
எனவே, 100 நாள் செயற்­றிட்­டத்தின் ஒரு பகு­தி­யாக இருந்­தாலும் சரி இல்­லாது போனாலும் சரி, போரின் இறு­திக்­கட்ட சம்­ப­வங்கள் குறித்து உள்­நாட்டு விசா­ரணை ஒன்றை நடத்தும் நிலை அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டுள்­ளது.
அதற்குக் காரணம், வரும் மார்ச் மாதம், ஜெனீவாவில் வெளி­யாகப் போகும் அறி க்கை மற்றும் அதன் மீதான ஐ.நா.வின் அடுத்­த­கட்ட நகர்­வு­க­ளுக்கு முன்­ன­தா­கவே இதனைச் செய்ய வேண்­டிய தேவை இருக்­கி­றது.
இலங்­கைக்கு எதி­ராக, 2012ஆம் ஆண்டு தீர்­மா­னத்தைக் கொண்டு வர முன்­னரும் சரி, முதல் இரண்டு தீர்­மா­னங்­களின் போதும் சரி, அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நாடுகள் நம்­ப­க­மான உள்­நாட்டு விசா­ர­ணை­யையே வலி­யு­றுத்­தின.
ஆனால், சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு ஏற்ப, சர்­வ­தேச சமூ­கத்தின் நம்­ப­கத்தைப் பெறக்­கூ­டிய விசா­ர­ணை­களை நடத்த இலங்கை அர­சாங்கம் மறுத்­தி­ருந்­தது. அதனால் தான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா.வின் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.
இப்­போது கூட, நம்­ப­க­மான விசா­ர­ணை­களை ஐ.நா.வின் உத­வி­யுடன் ஆரம்­பிப்­பதன் மூலம், ஜெனீவா நகர்­வு­க­ளுக்கு தற்­கா­லிக தடை ஒன்றைப் போடலாம் என்று இப்­போ­தைய அர­சாங்கம் கரு­து­கி­றது.
இந்­தி­யாவும் கூட இதற்கு நிச்­சயம் ஆத­ர­வ­ளிக்கும். ஏனென்றால் குற்­றங்கள் தொடர்­பாக சர்­வ­தேச விசா­ர­ணைக்குத்தான் இந்தியா எதிர்ப்புத் தெரி­வித்­ததே தவிர, ஒரு ­போதும் உள்­நாட்டு விசா­ர­ணைக்கு எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை.
அதை­விட, குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்ற கருத்­தையும் இந்­தியா ஏற்­க­னவே வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.
அதனால் தான், ஜெனீவாவில் இலங்­கை க்கு ஆத­ரவு வழங்கக் கோரிய வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு, உட­ன­டி­யாக உள்­நாட்டு விசா­ர­ணையை ஆரம்­பிக்­கு­மாறு இந்­தியத் தரப்பில் ஆலோ ­சனை கூறப்­பட்­டுள்­ள­தாகத் தகவல்.
அவ்­வாறு நம்­ப­க­மான ஒரு விசா­ரணைப் பொறி­முறை உரு­வாக்­கப்­பட்டால், ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை அடுத்த கட்டம் குறித்து சற்று நிதா­ன­மா­கவே முடி­வெ­டுக்கும்.
ஏனென்றால், அவர்கள் தரப்­பிலும் பல­வீ­ னங்கள் உள்­ளன. ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணை அறிக்­கையை வைத்து இலங்கைக்கு எதி­ராக உட­ன­டி­யாக எந்த நட­வ­டிக்­கை­யை யும் மேற்­கொள்ள முடி­யாது.
அதற்குப் பாது­காப்புச் சபையின் அனு­மதி தேவை. பாது­காப்புச் சபை­யிலோ, சீனாவும், ரஷ்­யாவும் வீட்டோ அதி­கா­ரங்­களால் அதனைத் தடுத்து விடும்.
எனவே, இலங்­கை­யுடன் இணக்­க­மா­ன­தொரு நிலையை ஏற்­ப­டுத்தக் கூடிய நம்­ப­க­மான உள்­நாட்டு விசா­ரணை மூலமே இந்தப் பிரச்­சி­னையைத் தீர்க்க முடியும் என்­பது அமெ­ரிக்­கா­வுக்கும் நன்­றா­கவே தெரியும்.
ஆட்­சி­மாற்­றத்­துக்கு அமெ­ரிக்கா உந்­துதல் கொடுத்­த­மைக்கு இதுவும் ஒரு காரணம். இது இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­துக்குச் சாத­க­மான விடயம்.
இதனைக் கருத்தில் கொண்டு தான், உள்­நாட்டு விசா­ரணை என்ற கவ­சத்தை இப்­போ­தைக்குப் பயன்­ப­டுத்தும் முயற்­சியில் இறங்­கி­யி­ருக்­கி­றது இலங்கை அரசு.
இது­பற்றிக் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக கடந்த வாரம் வாஷிங்டன், நியூயோர்க், ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூது­வர்கள் வெளி­வி­வ­கார அமைச்­சினால் கொழும்­புக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
அதே­வேளை, ஐ.நா.வின் உத­வி­யுடன் நம்­ப­க­மா­ன­தொரு விசா­ரணைக் குழுவை நிய­மிக்க முன்னர், புதிய அர­சாங்­கத்­துக்கு இன்னும் சில சிக்­கல்­களும் இருக்­கின்­றன.
ஏற்­க­னவே நிய­மிக்­கப்­பட்ட காண­மற்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­குழு ஒன்று உள்­ளது.
போர்க்­குற்­றங்கள் குறித்து விசா­ரிக்கும் அதி­கா­ரமும் அதற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.
இவற்­றினால் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ ர­ணைகள் குறித்தும் முடி­வெ­டுக்க வேண்டும்.
புதிய விசா­ர­ணை­களின் நம்­ப­கத்­தன்­மையை உறுதிப்படுத்த வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டும் போதாது, சிங்கள மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆக, இது கல்லில் நார் உரிக்கும் காரியம் தான். என்றாலும் அதைச் செய்தேயாக வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு உள்ளது.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டு விசாரணைகளை நடத்துவதற்கு வசதியாக, அதன் போக்கை மதிப்பிடுவதற்காக, ஐ.நா.வும் அமெரிக்காவும் கூட குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்க முன்வரலாம்.
ஏனென்றால், அதைவிட வேறு தெரிவு அவர்களுக்கும் இல்லை.
ஆனால், அத்தகைய தீர்மானம் தமிழர் தரப்புக்கு ஏமாற்றமளிப்பதாகவே அமையும். தமிழர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்ததன் விளைவே இது என்று, தீவிர கருத்துடையோரால், குற்றம் சாட்டப்படும் நிலையையும் இது ஏற்படுத்தக் கூடும்.
என்.கண்ணன்
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcix1.html

Geen opmerkingen:

Een reactie posten