[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 05:03.26 AM GMT ]
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் இருந்து சீனன்குடா நோக்கி சென்ற படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு பெண்ணும் ஆணுமே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். படகில் 4 ஆண்களும் மூன்று பெண்களும் பயணம் செய்துள்ளனர்.
இவர்களில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
சம்பவம் குறித்து சீனன்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
கிண்ணியா, காக்காமுனை ஆரூப் பிரதேசத்திலிருந்து கப்பல்துறைக்கு படகில் சென்ற 7 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கச்சான் அறுவடைக்காக இன்று காலை சென்று கொண்டிருந்த போதே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மூன்று மாத கர்ப்பிணியான அஷ்மா (வயது 17) உவைஸ் தனூஷ் (வயது 12) மற்றும் கடாபி முனிஷா (வயது 7) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களுடன் சென்ற மற்றைய நால்வருக்கும் எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லை. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblp1.html
எதிரணியில் இணைந்து கொண்ட தந்தையின் முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்: சிந்தக ஏக்கநாயக்க
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 05:13.30 AM GMT ]
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாக இருக்கும் போது வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை உதாசீனம் செய்து விட்டு எனது தந்தையான நந்திமித்திர ஏக்கநாயக்க எதிரணி வேட்பாளரை ஆதரிப்பது கேலிக் கூத்தாக இருக்கிறது.
மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்துவதே எனது நோக்கம்.
நாட்டில் ராஜபக்ஷ தலைமையிலான நீலப்படை அணியின் மாத்தளை மாவட்ட தலைமைத்துவத்தை ஏற்று மாத்தளை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தான் சேவை செய்து வருகிறேன்.
தந்தை கட்சி மாறினார் என்பதால் நான் மஹிந்த ராஜபக்ஷவை விட்டு ஒருபோதும் பிரிந்து போவதில்லை எனவும் மாகாண சபை உறுப்பினர் சிந்தக ஏக்கநாயக்க தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblp2.html
மஹிந்தவின் ஜனநாயகம் குறித்து கவலைப்படும் எதிரணி பொது வேட்பாளர்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 05:53.10 AM GMT ]
பெல்மதுளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி பற்றி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பேசி வருகிறது. மக்கள் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை எதிர்பார்க்கும் போது இப்படியான வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்பில் தாம் மிகவும் வேதனைப்படுவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளரின் பெல்மதுளை கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல் காரணமாக 6 பேர் காயடைந்துள்ளனர்.
பொது வேட்பாளரின் கூட்டம் நடைபெற்ற மேடைக்கு பின்புறம் இருக்கும் கட்டிடத்தில் இருந்து இந்த கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். எவ்வாறாயினும் தாக்குதல் காரணமாக ஆத்திரமடைந்த எதிரணி ஆதரவாளர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblp3.html
Geen opmerkingen:
Een reactie posten