தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

அரசாங்கம் இராணுவ தீர்வினை நம்பியமையே தமிழ் மக்கள் பலியானமைக்கு காரணம்!- பான் கீ மூன்

தலிபான் மற்றும் அல்-குவைதாவுடன் தடை செய்யப்பட்ட தனி நபர்கள் தொடர்பு: இலங்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 01:08.44 PM GMT ]
விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு தடை செய்யப்பட்ட வெளிநாடுகளில் இயங்கும் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் பட்டியலிடப்பட்டுள்ள 424 தனி நபர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்க அச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்யப்பட்டியலில் சேர்த்துள்ளதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.

ஜேர்மனி, டென்மார்க், பின்லாந்து உட்பட பல நாடுகளிலும் வாழும் 400க்கும் மேற்பட்ட புலம்பெயர் இலங்கையர்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த அமைப்புகளும், தனி நபர்களும் தலிபான் மற்றும் அல்-குவைதா ஆகிய இரண்டு முக்கிய சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் சொத்துக்கள், நிலங்கள் மற்றும் வங்கி கணக்குகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரரா தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகள் இலங்கையில் உள்ள சில அமைப்புகளுக்கு நிதியுதவிகளை அனுப்பியுள்ளதுடன் அந்த அமைப்புகளை அடையாளம் காண அரசாங்கம் விசாரணைகளை நடத்த உள்ளது.
அத்துடன் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த எவருக்கும் வீசா வழங்கப்பட மாட்டாது எனவும் அவர்களில் எவரும் நாட்டிற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தடைக்கு எதிராக சட்டம் மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுக்க போவதாக தடை செய்யப்பட்ட அமைப்புகளில் ஒன்றான உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் பேச்சு, சுதந்திரமான சமூகம், நேசத்திற்குரிய சுதந்திரம், ஜனநாயகம் என்பன வரையறுக்கப்பட்டுள்ளன.
ஜனநாயகம் இல்லாத இலங்கையுடன் பயங்கரவாத தந்திரோபாயங்களுடன் எவரும் பணியாற்றி முடியாது என்ற தெளிவான செய்தியை அரசாங்கத்திற்கு அனுப்ப உள்ளதாக உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் அமைப்பு, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடியத் தமிழர் தேசிய பேரவை, தமிழ் தேசிய பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு, உலக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை, உலக தமிழர் நிவாரண நிதியம் உட்பட 16 அமைப்புகளை இலங்கை அரசாங்கம் அண்மையில் தடை செய்தது.
http://www.tamilwin.com/show-RUmsyETaLWep5.html
நவிபிள்ளையின் நாயைக் கூட இலங்கையில் விசாரணை மேற்கொள்ள அனுமதியோம்!– நிமல் சிறிபால டி சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 02:39.31 PM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.  நவிபிள்ளை அல்ல அவரது நாய்கூட இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு நாம் இடமளியோம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார். 
பதுளையில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போது ஜெனிவா பிரேரணை உள்ளது. ஏன் நாம் அதனை எதிர்க்கின்றோம். எமக்கென்று மகத்துவம் உள்ளது.
நாட்டிலுள்ள உள்ளக விவகாரங்களில் வெளித் தரப்பினர் தலையீடு செய்வதை நாம் விரும்பவில்லை. அதற்கு இடமளிக்கவும் மாட்டோம்.
எமது வீட்டில் பிரச்சினை இருந்தால் நாமே அதற்கு தீர்வு காண வேண்டும். எமது நாட்டில் பிரச்சினை இருந்தால் நாமே அதற்கும் தீர்வினை காண வேண்டும்.
இதன் காரணமாகவே மேதகு ஜனாதிபதியும் எமது அரசாங்கமும் சர்வதேச சதிகளுக்கு எதிராக அந்தப் பிரேரணைக்கு எதிராக ஜெனிவாவில் போராடினோம்.
நவிபிள்ளை அம்மையார் அல்ல அவரது நாய்கூட இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு நாம் இடமளியோம் என்பதை இலங்கையிலும் மிகத் தெளிவாக கூறியுள்ளோம்.
ஏனெனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாட்டின் சுயாதீனத்தன்மை, இறைமை, மற்றும் மகத்துவத்தை பாதுகாப்பதற்கும் நாட்டின் அபிமானத்தை பாதுகாப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஒருவரவார்.
http://www.tamilwin.com/show-RUmsyETaLWeqy.html
அரசாங்கம் இராணுவ தீர்வினை நம்பியமையே தமிழ் மக்கள் பலியானமைக்கு காரணம்!- பான் கீ மூன்
[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 11:33.55 PM GMT ]
இலங்கை அரசாங்கம் இராணுவ தீர்வினை நம்பியதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான மக்களை இறுதி யுத்தத்தில் கொன்று குவித்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
த இன்டிபென்டன்ட் பத்திரிகைக்கு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருவாண்டாவில் 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் அவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
இதில், 20 வருடங்களுக்கு முன்னர் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளை தற்போதைய அரச தலைவர்கள் அவர்களின் நாடுகளில் நடத்தி வருகின்றனர்.
சிரியாவில் கடந்த மூன்று வருடங்களில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டனர்.
இவை அனைத்துக்கும் அந்தந்த நாடுகள் தங்களின் பிரச்சினைகளுக்கு இராணுவம் தான் தீர்வு என்று நம்பியமையே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் உதவிகளின் மூலம் சிராலியோன் மற்றும் திமோர் போன்ற நாடுகள் தங்களின் உள்நாட்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கமும், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு பெற்று, தங்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETaLWeq4.html

Geen opmerkingen:

Een reactie posten