சிங்கள பெண்கள் குத்தாட்டத்தோடு டக்ளஸ் திறந்துவைத்த அலுவலகம் !
28 April, 2014 by admin
வவுனியாவில் வாழ்வின் எழுச்சி அலுவலகத்தை டக்ளஸ் நேற்றைய தினம்(27) அன்று திறந்துவைத்தார். சிங்கள் மற்றும் தமிழ் பெண்கள் குத்தாட்டம் போட , பாரிய ஆரவாரத்தோடு அவர் இந்த அலுவலகத்தை திறந்துவைத்தார் என்று மேலும் அறியப்படுகிறது. இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆழுனர் சந்திர ஸ்ரீ, வட மாகாண அரச அதிபர்களும் கலந்துகொண்டார்கள். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ், வாழ்வின் எழுச்சி அலுவலகம் இயங்க இருப்பதாக டக்ளஸ் மேலும் தெரிவித்துள்ளார். இராணுவப் பிரசன்னம் அதிகமாக கணப்படும் வன்னியில், மக்கள் சகஜமாக வாழ்வதே மிகவும் கடினமாக உள்ளது. இன் நிலையில் வாழ்வின் எழுச்சி என்று கூறி அலுவலகங்களை அரசாங்கம் திறந்து வைப்பது பெரும் வேடிக்கையான விடையம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். புகைப்படங்கள் இணைப்பு.



http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6749
தொண்டர் படையில் சேர யாழ் இளைஞர்கள் முண்டியடிப்பு !
28 April, 2014 by admin
இராணுவத்தின் தொண்டர் படையில் வேலைக்கு சேர்கின்றமைக்கு யாழ். மாவட்ட இளையோர்கள் பல நூற்றுக் கணக்கில் முண்டி அடித்து செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. ஈழ உணர்வு இணையத்தளங்களும் ஊடகங்களும் இதற்கு கடும் எதிர்பை வெளியிட்டுள்ளபோதிலும், முதலாம் கட்ட ஆட்சேர்ப்பு கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இளையோரும், இவர்களின் பெற்றோரும் ஈழ உணர்வு பிரசாரங்களை பெரிதாக பொருட்படுத்துவது போல் தெரியவில்லை. கடந்த மாதம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான இளையோர்களுக்கு துறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இது பலாலி படைமுகாமில் வைத்தே வழங்கப்பட்டு வருகிறது. இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு, யாழ் இளைஞர்கள் முண்டியடித்துச் செல்வதைப் பார்க்கும்போது, அங்கே என்ன நடக்கிறது என்று எண்ணத்தோன்றுவதாக யாழில் உள்ள சில உணர்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். தொண்டர் படையில் இணையும் ஒருவ்வொரு இளைஞருக்கும் தலா 30,000 ஆயிரம் மாதம் வழங்கப்படுவதாகவும், இது ஒரு அரசாங்க உத்தியோகம் என்றும் ஆசையூட்டப்பட்டு வருவதாக மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6750
Geen opmerkingen:
Een reactie posten