கென்யாவில் இரு இலங்கையர் கைது- போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது- திருமலை மாணவர்கள் படுகொலை: 12 படையினரும் விளக்கமறியலில்
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 02:41.39 PM GMT ]
இவர்கள் வோய் நகரில் சட்டவிரோதமான முறையில் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர் என கென்யாவின் வருவாய் மற்றும் சுரங்க துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
13வது திருத்தச் சட்டத்தை வைத்து கொண்டு மக்களை ஏமாற்றி வந்த அரசாங்கம் தற்பொழுது, பறக்கும் மீன்கள் என்ற திரைப்படத்தை கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் விதிகளை மீறி, குறித்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பில், மெம்பாஸாவில் உள்ள வருவாய் ஆணையத்தின் பிராந்திய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியதாக சிரேஷ்ட வருவாய்துறை அதிகாரி ஹெனிங்டோன் ஒலேரோ தெரிவித்தார்.
சட்டத்திற்கு புறம்பான முறையில், வோய் நகரில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மணிக்கல் வர்த்தக நிலையங்களை சுரங்க திணைக்களம் அண்மையில் மூடியது. இதனையடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணிக்கல் முகவர்கள் அனுமதிப் பத்திரங்கள் இன்றி, நகரில் அலுவலகங்களை திறந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த பிராந்தியத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் இலங்கை பிரஜைகளும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று எட்வர்ட் ஒமிட்டோ என்ற அதிகாரி கூறினார்.
கடந்த வருடமும், அனுமதிப் பத்திரமின்றி, விடுதி அறையில் வைத்து, மாணிக்கற்களை கொள்வனவு செய்த இலங்கை பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர் என்றும் அவர் தெரிவி்த்தார்.
வெளிநாட்டு மாணிக்கல் முகவர்கள் மற்றும் சுரங்கத்தினரின் நாட்டின் கனிய வள கடத்தல்களில் ஈடுபட்டு வருவதால் கென்யா பல பில்லியன் ஷில்லாங்குகளை இழந்து வருகிறது.
இலங்கை மற்றும் தன்சானியா நாடுகளில் இருந்து கென்யா செல்லும் செல்வந்த மாணிக்கல் வியாபாரிகள், மாணிக்கற்களை சட்டவிரோதமாக கொள்வனவு செய்து, அதனை கென்யா - தன்சானியா எல்லை வழியாக கடத்திச் செல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹெரோயின் வைத்திருந்த நபர் கைது
கொழும்பு தெமட்டகொட பகுதியை சேர்ந்த ஒருவர், ஹெரோயின் போதைப் பொருள் தொகையுடன் பொரள்ள எலிவிட்டிகல எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட 27 வயதான சந்தேக நபரிடம் இருந்த 70 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று நேர்நிலைப்படுத்தப்பட உள்ளார்.
பொரள்ள பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, போதைப் பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குவதாக கூறி, பொலிஸாரை ஏமாற்றிய நபர் ஒருவர் மன்னார் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கேரளா கஞ்சா போதைப் பொருள் தொகையுடன், இன்று கைதுசெய்யப்பட்டார் என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் கடற்பரப்பின் வழியாக போதைப் பொருள் கடத்தி வரப்படுவது தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு பெற்று தருவதாக தெரிவித்து, இந்த நபர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருமலை மாணவர்கள் படுகொலை: 12 படையினரும் விளக்கமறியலில்
2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 12 விசேட அதிரடிப்படை வீரர்கள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்பொழுதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இரகசிய பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளினால் கைசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் கடந்த 4 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேர்நிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
திருகோணமலை கடற்கரையில் இருந்த பொழுது, பல்கலைக்கழக நுழைவு அனுமதியை பெற்றிருந்த 4 மாணவர்களும், மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஒரு மாணவரும், 2006 ஆம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் அதிரடிப்படையை சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் அடங்குகிறார்.
அரசாங்கம் பறக்கும் மீன்கள் திரைப்படத்தை வைத்து மக்களை ஏமாற்றுகிறது: மங்கள சமரவீர
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 01:42.16 PM GMT ]
இராஜகிரியவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு அமைச்சினால் தடைவிதிக்கப்பட்டுள்ள, பறக்கும் மீன்கள் திரைப்படத்தினால், இராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் எந்த களங்கமும் ஏற்படுத்தப்படவில்லை. அப்படி இருப்பதாக கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது.
இராணுவத்தை அவமதிக்கும் வகையில் பறக்கும் மீன்கள் படமாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி, அரசாங்கத்தின் அடிவருடிகள் நேற்று கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு எதிரில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இது முற்றிலும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். 13வது திருத்தத்தை கொண்டு மக்களை ஏமாற்றி வந்த அரசாங்கம், தற்போது, பறக்கும் மீன்களை தன் கையில் எடுத்து கொண்டுள்ளது.
திரைப்பட இயக்குனர் சஞ்சீவ புஷ்பகுமார மற்றும் படக் குழுவினருடம் பேசினேன், அந்த படத்தில், இராணுவத்தை அவமதிக்கும் வகையிலான கதையம்சம் இல்லை.
எல்லைக் கிராமத்தில் வசித்து வரும் தாய் மற்றும் மகளுடன், அந்த கிராமத்தில் கடமையில் இருக்கும் இராணுவ வீரர் தகாத உறவை வைத்து கொள்கிறார். இதனையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை புலிகள் கொலை செய்கின்றனர். இதுவே அந்த திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
புலிகளின் கொடூரமான கொலைகளை சித்தரித்துள்ள இந்த படத்தில் இராணுவம் எப்படி அவமதிக்கப்படும் என தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten